Sunday, March 25, 2012

Meendum Muthukumar - Syndicate Bank


அன்புடன் அனைவருக்கும் 

ஞாயிறு  திங்கள்  நம்  மகாலிங்கப் பெருமானை  தரிசித்த  மகிழ்ச்சியோடு  அடுத்த  வாரம்  சபரிமலைப் பயணம்...எந்திர  வாழ்க்கையிலிருந்து  விலகி, இறைவனை  நினைத்து, பேதங்கள்  விலக்கி, இயற்கையோடு
முடிந்தவரை  ஒன்றி....வித்யாசமான  அனுபவம்  பெரும் ஒரு  சந்தர்பம் ...  
65   பேர்கள் கொண்ட  குழு. 60 வயதைக் கடந்தவர்கள் இருபது பேர்கள்..தம்பதிகளாக  20 பேர்கள்...என்னைப் போன்று  மூவர் தவிர அனைவரும் கேரளத்திலிருந்து  மும்பைக்கு  குடியேறி செட்டில் ஆனவர்கள்...தவிர மராட்டியர்கள்
ஐந்தாறு பேர்...PLANNED  PROGRAMMES ..
பம்பாவில்  GROUPS  பிரித்து LEADER இன் தலைமையில்   மலையேற வேண்டும்...வழக்கமாக  ஒரு மணி நேரத்தில் சந்நிதானம்  அடைந்து விடும் பாஸ்ட் க்ரூபில் சென்று விடுவேன்..இம்முறை  6 வது பாட்ச்சில் நாராயணன்  தலைமையில் அனுப்பப்பட்டேன்....
"..முத்துக்குமார்   நீ  ஒடறாய்...யு ஆர் நாட்  ஒபெயிங் மீ..என் பின்னாடி வா..திஸ் இஸ் மை ஆர்டர்.."
இத்தனை முறை உடல் வருத்தி மலை வந்தும்  இவரிடம்  கோபம்  இன்னும்  நிறைய இருக்கே  என்று நினைத்தபடி அவர் பின்னால்  நடக்க ஆரம்பித்தேன்....இன்னும்  சிலரும்.
"..மாமா  பதினெண் சித்திகள்  பதினெட்டு படிகளாய் இருக்கு  இல்லையா மாமா.."
"ஒவ்வொரு படியில் தேங்காய் உடைத்து  (இப்போது  பக்கத்து  சுவற்றில் அடிக்கிறோம்) அணிமா மகிமா என்று ஒவ்வொரு சித்தியாய் நமக்கு  கிடைக்கணும்...பிரார்த்தனை  பண்ணனும் ..கேட்டியா நீ..."  என்றார்.
"இந்த முறை படி ஏறும்போது  எனக்கு  பதினெட்டு வருடங்கள்  முடியும் மாமா..என்னை  ஆசீர்வாதம்
பண்ணுங்கோ.." என்றேன். ஒவ்வொரு முறையும் முதல் தடவை செல்வது போல் தான்  தோன்றும் எனக்கு.
"அடேடே  இந்த புத்தி வந்தா போருமேடா...அவன்  பாத்துப்பான்  வா வா .."  எதிரே வந்த சுமை தாங்கிகளுக்கு வழி விட்டு நடந்தோம்.
"மாமா  நீங்க RBI இல் கவர்னர் கிட்டே வேலை பார்த்தவர்...உங்களுக்கு  ஸ்ரீதரைத் தெரியுமா?.."
"ஆரு..? நடுவக்கரை  ஸ்ரீதரா  ...நாற்பது  வருஷ  பழக்கமாக்கும்...இப்போ  எங்க இருக்கார்..?"
"அங்கேதான் RBI இல் ...எனக்கு  ஸ்கூலில்  சீனியர்... "
"ஹே அப்படியாக்கும்  சேதி  ..அற்புதமான  மணிஷர் ...நாங்க  CLOSE ஆக்கும்..."
இப்படியாக  நாராயணன்  மாமா  எனக்கும்  CLOSE  ஆனார்.
------------------------------
------------------------------------------------------------------------------------------
திருக்குற்றாலத்தில்  தங்கி  அச்சன்கோவில்  செல்வது வழக்கம்...30 கூடைகளில்  பூக்களை  இறைவன்  மீது அபிஷேகம் செய்து ..புஷ்பாஞ்சலி  இல் மெய்மறப்போம்...
குற்றாலம் லாட்ஜில்  என்னுடன் தங்கியவர்  பெயர்  தசரதராமன்.
"....மாமா  பாலக்காடோ..  என் பேர்  முத்துக்குமார்...சென்னையிலிருந்து ..போன முறை உங்களைக்
காணலை.."
"தசரதராமன்னு  பேர். கும்பகோணம் ஊர்..இப்போ  மும்பை...
பய்யன்  அங்கே  செட்டில் ஆயிட்டான்..அதான்..1967 sslc நான்.
மலைக்கு போகணும்னு  ஆசை..வீட்டில்  மாமியும் வரேன்னா.
கிளம்பிட்டோம்..."
மாமி பெயர்  வசந்த கோகிலம்.. ஊர் திருவிடைமருதூர்...
தெற்கு  மடவிளாகம். அப்பா  மணி அய்யர்  மகாலிங்கசுவாமி
கோவிலில் வேலைப் பார்த்தவர். ...1970 - 1971 SSLC முடித்த
கையோடு  கல்யாணம் ஆகிவிட்டது.
--------------------------------------------------------
'எங்கெங்கு  காணினும் சக்தியடா ..' மாதிரி  எங்கெங்கு சென்றாலும்
நம்ம ஊர் முன் நிற்கிறது...
முத்துக்குமார் ..மீண்டும்.
Muthu Kumar

09884673027

No comments:

Post a Comment