Saturday, January 4, 2014

பாகவதம்- கூர்மாவதாரம்



அன்பர் பாலன் பிரதோஷ மகிமையைப்பற்றி மிக அருமையாக எழுதியிருந்தார்.அவர் அனுமதியுடன் மேலும் தொடர விரும்புகிறேன்.

ஸ்ரீமத் பாகவதத்தில் அம்ருத மதனம் என்ற அத்தியாயத்தில் விரிவாக இடம் பெற்றுள்ளது.பின்னனியைப்பார்ப்போம் 

தேவாசுரப்போராட்டத்தைப்பற்றி நாம் அறிவோம்.அசுரர்களின் கை தான் ஒங்கியிருந்தது அது போதாதென்று அசம்பாவித சம்பவமும் ஒன்றும் நிகழ்தது நம் துர்வாசமுநிவருக்கு அதிசயமான மலர்மாலை ஒன்று கிடைத்தது.அதை `இந்திரனுக்கு அளிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.காரணம் அவருக்கும்,பகவானுக்கும்தான் தெரியும்.இந்திரன் யானையின் மீது பவனி.இவரைக்கண்டு மரியாதைக்காக கூட இறங்கவில்லை.மேலும் இடது கையால் வாங்கினது மட்டுமில்லாமல்,தான் அணியாமல், யானையின் பிடரியில் போட்டான்.யானை தன பங்குக்கு மாலையை கீழே வீசி காலால் மிதித்து துவசம் செய்தது.

துர்வாசர் உடன் கோபம் கொண்டுஇந்திரனும்,மற்ற தேவர்களும் செல்வங்களையும் இழப்பார்கள்.தேவலோகம் இருண்டு போகும் என்று சாபம் இட்டார்.அப்படியே நடந்தது.ஆலோசனை கூட்டத்தின் முடிவின் படி பிரம்மாவிடம் முறையிட்டனர்.,பின் பகவானிடம் சரணடைந்தனர்.பகவான் "பயப்படவேண்டாம்.வழி உள்ளது.  மந்தர மலையை  மத்தாகவும்,வாசுகியை நாணாகவும் கட்டி பாற்கடலை கடைந்தால் அம்ருதம் வெளிப்படும்.அதை உண்டால் மரணம் கிடையாது.ஆனால் அதற்கு அசுரர்களின் உதவி தேவை.அவர்களிடம் தற்காலிகமாக சமாதானம் செய்து கொண்டு ஒத்துழைப்பை நாடுங்கள். நானும் எல்லா உதவிகளையும் செய்கிறேன் "என்றார்.

அதன்படி தேவர்கள் அசுர சக்கரவர்த்தி பலி  இடம் இனிமையாக பேசி சம்மதம் பெற்றனர்.பின் இரு பிரிவினரும் மந்திர மலையை பெயர்த்தும் பாரம் தாங்காமல் போட்டதில் பலர் மாண்டனர்.பகவான் தோன்றி தன் கையால் தூக்கி கருடன் மீது வைத்து பாற்கடலுக்கு சென்றார்.கருடன் தான் அங்கிருந்தால் வாசுகி வர வாய்ப்பில்லை என்ற காரணத்தால் விடை பெற்றது.

தேவர்களுன்.அசுரர்களும் வாசுகியை அழைத்து வந்து மந்திரமலையைகட்டி இரு பக்கமும் பிடித்தனர்.பகவானுக்கு,தலைப்பக்கம் பிடித்தால் வாசுகியின் சீற்றத்தின் வெப்பத்தை தாகமுடியாது என்று தெரியும். எனவே வேண்டுமென்றே தலையை பிடித்தார்.இது அசுரர்களுக்கு,தாங்கள் வாலைப்பிடிப்பது தன்மான,கௌரவ பிரச்னை யாக உருவெடுத்தது  தங்களுக்கு தலை பக்கம் வேண்டும் என்று சண்டையிட்டனர்.பகவான் புன்னகையுடன்  சம்மதித்தார்.

கடையத்தொடங்கியவுடன் மலை நீரில் மூழ்கியது பகவான் கூர்மாவதாரம் எடுத்து,                                                                                                                                                                                                                                                                                                                                                  ஆமை வடிவம் கொண்டு மலையை தாங்கினார்.மலை மத்தாக நிலைகொண்டது பல இன்னல்களுக்கு பின் வெளிவந்தது கொடிய ஆலகால விஷம் தான் ,அதை தாங்கமுடியாமல் சிவபெருமானிடம் சரணடைந்தனர்.கருணையுடன் அவரி விழுங்கி தொண்டைக்குள் நிறுத்திக்கொன்டார் விஷம் தன வீரியத்தைக்காட்டியும் பெருமான் அடக்கியதால் தொண்டையை மட்டும் நீல நிறமாக்கி அடங்கியது.பெருமான் நீலகண்டன் ஆனார்..மற்ற விபரங்களையும் பிரதோஷ  மகிமையையும்  தனியாக பார்ப்போம்.

கடை தல் தொடர்ந்தது.முதலில் காமதேனு வெளிப்பட்டது.அதை மகரிஷிகள் எடுத்துக்கொண்டனர்.
உச்சை சிரவஸ்  என்ற குதிரையை ...பலி சக்கரவர்த்தி,
ஐராவதம் என்ற வெள்ளை யானையை இந்திரன் 
பாரிஜாதம் என்ற விருட்சத்தையும்,தேவகன்னிகைகளை தேவர்கள்.
கௌஷ்துப  மாலையை பகவான் 
மகாலட்சுமி பகவானுக்கு மாலையிட்டாள்.அவர் தம் மார்பில் வசிக்கச்செய்ததால் ஸ்ரீநிவாசன் ஆனார்.
போதையை யை உண்டாக்க கூடிய வாருணி தேவதையை அசுரர்கள் உரிமையுடன் பெற்றனர்.

இறுதியி.ல் பகவானின் அவதாரமாகிய தன்வந்தரி அம்ருதம் நிரம்பிய கலசத்துடன் தோன்றினார்.அதை தேவர்களும் ,அசுரர்களும் மாறி மாறி பிடுங்கிக்கொண்டுஒடி சண்டையிட்டனர்.

பிரச்னையை மோகினி ரூபம் எடுத்து எப்படி பகவான் முடித்தார் என்பது பின்னர்.


தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மீண்டும் மூண்ட சண்டையில் பலம் குறைந்த தேவர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.பகவானிடம் சரணடைந்தனர்.அவர் "ஏதேனும் உபாயத்தின் மூலம் உங்களுக்கு அம்ருதம் கிடைக்க வழி செய்கிறேன் "என்று உறுதி அளித்தார்.அமுதத்தை பிடுங்கி சென்ற அசுரர்களால் உடல் புசிக்க முடியவில்லை.யார் முதலில் சாப்பிடுவது,அளவு குறித்து குழப்பமே நிலவியது.

இந்த நேரத்தில் பகவான் ,எவரும் அதுவரை கண்டிராத அதிரூப சுந்தரியாக, அவர்களுக்கு முன் தோன்றி ஒயிலுடன் அங்கும் இங்கும் நடை பயின்றாள் .அவ்வளவுதான்.அசுரர்கள் சண்டையை உடன் நிறுத்தி வாயைப்பிளந்தனர்.பெண்ணை நோக்கி 'நீ யார்?நாங்கள் எல்லோரும் உன்னிடம் மிகப்பிரியம் கொண்டுள்ளோம்.சண்டையையும் நிறுத்திவிட்டோம்.இந்த அம்ருதத்தை எங்களுக்கு பங்கிட்டுக் கொடுக்க நீயே தகுதியானவள்,"என்று வேண்டினர்.

பெண் "நான் ஆண்கள் விஷயத்தில் ஸ் திர  புத்தி இல்லாதவள். என்னிடம் பிரியம் வைத்தது வேடிக்கையாக உள்ளது.எண் னைப்போன்றவர்களிடம்  அறிவாளிகள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள்."என்று பிடி கொடுக்காமல் நடித்தாள் .அசுரர்கள் மேலும் மயங்கி,அம்ருத கலசத்தை கொடுத்தனர்,

மோகினிப்பெண் " நான் தேவர் அசுரர் இருவருக்கும் சமமாக பங்கிடுவேன்.ஆனால் இடையில் யாரும் தலையிட்டு ஆட்சேபம் தெரிவிக்கக்கூடாது"என்று நிபந்தனை விதித்தாள்.எல்லோரும் கட்டுண்டனர்.

பின் மோகினியின் உத்தரவுப்படி  எல்லோரும் குளித்து புத்தாடை அணிந்து .தேவர்கள் ஒரு வரிசையாகவும்,அசுரர்கள் மற்றொரு வரிசையாகவும் கடற்கரையில் தர்ப்பையை பரப்பி அமர்ந்தனர்.மோகினி அம்ருத கலசத்தை ஏந்தியபடி வெகு சொகுசாகவும் ,ஒயிலாகவும்,மேலாடை நழுவியபடியும் மோகனப்புன்னகையை சிந்தியபடி நடந்து வந்தாள் .

முதலில் தேவர்களுக்கு பங்கிட ஆரம்பித்தாள் .ஆனால் வசீகர புன்னகையை மட்டும் அசுரர் பக்கம் வீசினாள் .அசுரர்கள் அவளுடைய அங்க அசைவினால் தங்கள் சிந்தையை பறிகொடுத்து அம்ருதத்தை மறந்தனர்.சிலர் சுய சிந்தனையில் இருந்தாலும்.நிபந்தனை கருதி மெளனமாக இருந்தனர்.தேவர்கள் சுகமாக புசித்தவண்ணம் இருந்தனர்..

அப்போது சுவர்பானு என்னும் அசுரன் தேவ வடிவம் கொண்டு தேவர்கள் மத்தியில் அமர்ந்து அம்ருதத்தை புசிக்கத் தொடங்கினான்.இதை சூரியனும்,சந்திரனும் பார்த்துவிட்டு மோகினி உருவில் இருந்த பகவானிடம் தெரிவித்தனர்.அம்ருதமும் தீர்ந்துபோய் கலசம் காலியாயிற்று.

இந்நிலையில் மோகினி மறைந்தாள் .சுய ரூபத்துடன் பகவான் வஞ்சகமாய் அம்ருதம் அருந்திய சுவர்பானுவின் தலையை வெட்டி வீழ்த்தினார். இருந்தாலும் அம்ருதம் உண்ட காரணத்தால் உயிர் போகவில்லை.பிரம்ம தேவர் ,அவன் தலையை சூரிய சந்திரர்களைப்போல ஒரு கிரகமாக்கினார்.அது தான் "ராகு "கிரகம்.தன்னைக்காட்டிக்கொடுத்த காரணத்தால் தான் சூரிய சந்திரர்களை கிரகண  காலத்தில் இன்றும் பிடிக்க முயற்சி செய்கிறான்.இதற்கிடையில் பகவான் கருடன் மீ தேறி தன லோகத்துக்கு பயணமானார்.

அசுரர்கள் மோசம் போனதை உணர்ந்தனர்.தேவர்களுடன் போராட்டம் தொடர்ந்தது.மோகினி மேல் சிவபெருமானே மோகித்து மயங்கியது வேறொரு கதை.

பிரதோஷ மகிமையை விரிவாக பார்ப்போம்.

மும்பை வெங்கட்டராமன்.


நேர்மறை உறுதி மொழிகள் -3



1974-ம்  ஆண்டு தீபாவளிக்கு இரண்டு மூன்று நாட்களே  இருந்தன . நான் அப்போது மும்பை ,மாடர்ன் ஹிந்து ஹோட்டலில் தங்கியிருந்தேன். அந்தக் கட்டடத் தில் நான்கு மாடிகள். மூன்றாம், நான்காம் மாடிகளில் தங்கும் அறைகள். முதல் இரண்டு மாடிகளில் அலுவலகங்கள். மூன்றாம் மாடியில் எட்டு அறைகள். மொத்தம் 32 படுக்கைகள். இந்த தளத்தில் அறைகளில் தங்குபவர்கள் அடிக்கடி வந்து 2-3 நாட்கள் தங்கி  தங்கள் அலுவல் களை கவனித்து விட்டு செல்பவர்கள். நான்காம் மாடியில்  மொத்தம்  ஆறு அறைகள்.   20 படுக்கைகள். இங்கு தங்கி இருப்பவர்கள் எல்லாருமே பம்பாயிலேயே வேலை செய்பவர்கள். மாத வாடகையில்  வருடக் கணக்காக இங்கேயே தங்கும் பிரம்மச்சாரிகள்   இந்த 20 பேரில் நானும் ஒருவன்.எல்லாருமே நல்ல நண்பர்கள். நல்ல சம்பளம் வாங்குபவர்கள் (அந்த காலத்திலேயே Rs. 4000-5000 ரேஞ்சில்)   சினிமா போவது என்றால் 10-15 பேர் சேர்ந்து விடுவார்கள். வருடாவருடம் தீபாவளி  சமயத்தில் நீண்ட விடுப்பு எடுத்துக்  கொண்டு அனைவரும் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

அந்த வருடம் நான் வேலை செய்யும் கம்பெனியின் Agents Conference தீபாவளியன்று  பம்பாயிலேயே நடக்க இருந்தது. என்னுடைய விடுமுறை மற்றும் ரயில்வே டிக்கெட் கான்செல் ஆகியது. தீபாவளிக்கு மூன்று .நாட்கள் முன்னரே எல்லா நண்பர்களும் ஊருக்கு சென்றனர்.எல்லா அறைகளும் காலி. நான்காம் மாடியில் யாருமே இல்லை.. இரவில் 12 மணி  வரை ரூமில் அரட்டை  அடிப்போம்.அன்று இரவு அறையில் தனிமை. பேச்சுத் துணைக்கு சுவர்களும் கட்டில்களும்  தான்.  டேப் ரிகார்டரில் ஆந்தி, மௌசம் பாட்டுக்கள் போட்டேன். முழுவதும் கேட்க முடிய வில்லை. தனிமை என்னை ஜெயிக்க ஆரம்பித்தது. மறு நாள் காலை எழுந்தேன். பேப்பர் படிக்கும் மூட் இல்லை. பேசுவதற்கு  யாருமே இல்லை.சாப்பிடும்போது 4-5 பேர். சினிமா போனால் குறைந்தது பத்து பேர். ஒரு ஜட்டி வாங்கினால் கூட   ஏழெட்டு பேர் சேர்ந்தே கடைக்குப் போவோம்.இப்படியே பழக்கப் பட்ட என்னால் தனிமையை ரசிக்க முடிய வில்லை.

 ஹோட்டல் அறைதான் எனக்கு அலுவலமாக இருந்தது. எந்த வேலையும் ஓட வில்லை. என் ஸ்டெனோவும் விடுப்பில் லால்குடி  போய் விட்டார்.இன்னொரு உதவியாளர் மராத்திக் காரர். அவரும் புனாவுக்கு அருகே இருந்த அவர.து கிராமத்துக்கு சென்று விட்டார். " மோஹன், அந்துலே நல்லா மாட்டிக் கிட்டார்."  " ஈரோசில் நல்ல படம், டவரிங் இன்பெர்னோ. நைட் ஷோ போலாமா?" நான்தான் சொன்னேனே Bobby 25 வாரம் போகும்னு" என்றெல்லாம் பகிர்ந்து கொள்ள யாருமே இல்லை. படுக்கையில் அமர்ந்து பேப்பரை கையில் வைத்த வண்ணம் பால்கனி பக்கம் பார்த்தேன். வாலஸ் ரோட் அமைதி காத்தது. சற்றே கண்களில் நீர் பனிக்கத் தொடங்கியது. சுற்றி யாருமே இல்லையா? தனிமை--தனிமை--தனிமை. இன்னும் சில நாட்கள் நான் என்ன செய்யப் போகிறேன்? இந்த வெறுமையில் , இந்த தனிமையில். உடம்புக்கு ஏதாவது ஆகி விடுமோ? மெண்டல் ஆகி விடுவேனோ? இந்த வேலையை விட்டு ஓடிவிடலாமா? 

" மூர்த்தி அண்ணா, நீங்க மட்டும்தான் இருக்கீங்க போல. காபி சாப்பிடுங்க. கிட்சென் க்லோஸ்டு, breakfast க்கு என்ன வாங்கி வரட்டும்? " கணேஷ் கதவைத் திறந்து உள்ளே வந்தான். கணேஷ் சமையல் கட்டில் வேலை செய்பவன்.சேலத்துக் காரன்.

"கணேஷ், நீ தீபாவளிக்கு ஊருக்கு போகலையா?" என்ன பதில் வருமோ என்று அவனை உற்றுப் பார்த்தேன்.
" அண்ணா, பத்து மணி சர்மா ட்ராவெல்ஸ்லே பெங்களூர் போய் சேலம் போரேன் Happy deepavali " என்ற படி 
மறைந்தான். சேச்சே , இவனாவது இங்கே இருக்கக்கூடாதா என்று நினைத்தேனே, என்ன சுயநலம்.

ரூமிலேயே அடை பட்டுக் கிடந்தேன். முதல் நாள் எதுவுமே சாப்பிடவில்லை.மறு நாள் காலை எழுந்ததுமே பசித்தது. குளித்து விட்டு வெளியே கிளம்பினேன். மாதுங்கா சென்றேன். உடுப்பியில் full meals. அரோராவில் படம் பார்த்தேன். 8 Ltd பஸ்ஸில் Flora Fountain வந்து, EROS சினேமாவில் ஆங்கிலப் படம் பார்த்தேன். New Marine Lines -ல் ஒரு ரோட் கடையில்  பாவு பாஜி சாப்பிட்டு ஹோட்டல் திரும்பினேன்.

இந்த இரண்டு நாட்கள்  மனதை விட்டு நீங்க மறுக்கின்றன.

இப்போதல்லாம் தனிமை இனிக்கிறது. தனிமையை விரும்பி ஏற்றுக் கொள்கிறேன். தனிமையின் விலை மதிப்பில்லா நிமிஷங்களின் தாக்கத்தை இப்போது உணர்கிறேன்.

காரணம் -நேர்மறை உறுதி மொழிகளின் புரிதல்தான்.
இப்போது உங்களுடன் பங்கிட்டுக் கொள்கிறேன்.


1. நான் தனிமையான நிலைகளை எனக்காக ஒதுக்கிக்கொண்டு அதை கொண்டாடுகிறேன்.
2. என் வாழ்வில் என்னை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதுமே என்னோடுதான் இருக்கி றார்கள்.
3. என்னுடைய நம்பிக்கை,உண்மைகள், கனவுகள்,பக்தி மார்க்கம் இவைகளைப் பற்றி சுய ஆராய்வு செய்ய ஒரு வாய்ப்பு அளிக்கிறது.
4. தனிமையான சமயங்களில் என்னால் அமைதியான சுகத்தை அனுபவிக்க முடிகிறது.
5. நான் என்னை நேசிக்கிறேன்; என்னை நானாக ஒத்துக் கொள்கிறேன். என்னால் தனிமையில் இனிமை காண முடியும்.
6. என்னால் தனிமை, வெறுமை போன்ற மாயைகளை உடைத்து வெளியே வர முடியும்.
7. என் பணிகளை நானே செய்யும்போது தன்னம்பிக்கையுடனும், சுகமாகவும் இருக்கிறேன். இதனால் நான் எதையோ சாதித்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இனி தனிமையைப் பற்றி நாம் ஏன் கவலைப் பட வேண்டும் ?

மூர்த்தி 


Saturday, December 21, 2013

நேர்மறை உறுதிமொழிகள்- 2

நேர்மறை உறுதிமொழிகள்- 2 

 நம் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும் பலம் வாய்ந்த சில எளிய உண்மையான மனப்பதிவுகள் நாம் வளர்ந்த பண்பாட்டிலும் சூழ்நிலையிலும் மறைந்து கிடப்பது என்?

சின்ன வயதிலிருந்தே எனக்கு நிறையவே அன்பு கிடைத்தது. என்னை வளர்த்த  தாத்தா, பாட்,டி, பள்ளி விடுமறைகளில் மட்டுமே நான் பார்க்கும் அம்மா, அப்பா, காலையில் என் கூடவே பள்ளிக்கு வந்து, வீடு திரும்பியதும் என்னோடு விளையாடும் நண்பர்கள் - இப்படி எல்லாருமே என்மீது அபரிமிதமான அன்பு செலுத்தினார்கள். ஆனால் ஒரு நாள் பள்ளி முடிந்த பின் இரு நண்பர்களுடன் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வேளான் ஆராய்ச்சி மையத்துக்கு சென்று எப்போதையும் விட 2 மணி நேரம் தாமதமாக வீட்டுக்கு வந்ததும் அன்பு செலுத்துபவர்களே நன்றாக திட்டித் தீர்த்தார்கள். அப்போது ஏற்பட்டன - பயம், வெட்க உணர்ச்சி மற்றும் குற்ற உணர்ச்சி - அன்பில் திளைத்த எனக்கு இந்த உணர்ச்சிகள் என் ஏற்பட்டன?

ஆனால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. நான் செய்த தவறான செயலுக்காக எனக்கு தண்டனை கிடைக்க வில்லை. நான் செய்த தவறான செயலால் எனக்கு பயமோ, வெட்கமோ அல்லது குற்ற உணர்வோ  ஏற்பட வில்லை.அன்று நான் தவறு செய்ய வில்லை. என் வயதை ஒத்த சிறுவர்கள் செய்யத் துணியாத ஒரு செயலை செய்து விட்டேன். வீட்டில் சொலிவிட்டு, ஒரு மூத்தவரின் துணையோடு நான் அங்கே சென்றிருந்தால் அது சரியாக இருந்திருக்கும். அது தான் சிறுவர்களுக்கான பண்பாடு.அப்படி போவதுதான் நியதி. நான் அந்த நியதியை மீறி விட்டேன்.   எனக்கு துணிவும், மகிழ்ச்சியும் அளிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி அந்த பண்பாட்டின் பின்னணியில் ஒரு சோக சம்பவமாக மாறி விட்டது. 

அன்று மனதில் பதிந்த உண்மை - விதி  முறைகளை மீறியதால் நல்ல செயலுக்கும் பாராட்டு கிடைக்காததால், கோழையாகி விடுகிறோம்.

இதனால்தான் இப்போது  நேர்மறை உறுதிமொழிகளை வெளியே தேட வேண்டிய கட்டத்துக்கு தள்ளப் பட்டு விட்டோம்.

இப்படித்தான் நாம் நம் குழந்தைகளை  வளர்க்க வேண்டுமா?

ஒரு பெற்றோராக நாம் என்ன செய்ய வேண்டும்? 

நேர்மறை உறுதிமொழிகளை எப்படி கடைப்பிடிக்கலாம்?

கீழ்க்கண்ட  நேர்முறை உறுதி மொழிகளை பெற்றோர்களாக நாம் போராடும் தருணங்களில் மனதில் கொண்டு  ஜபிக்க வேண்டும்.

1 .நாங்கள்  ஒரு நல்ல, அன்புள்ள மற்றும் தன்னம்பிக்கையுள்ள ஒரு தாய்/தந்தை.

2. எங்கள்  குழந்தைகளை , அவர்களது தற்போதைய,   நிலையிலேயே எந்த வித நிபந்தனையு மின்றி  நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்,  அந்த அன்பை அவர்களும் எங்களுக்கு திருப்பித தருகிறார்கள்.

3.. என் குழந்தைகள் சொல்வதை கூர்ந்து கவனிப்பேன். அவர்கள் தேவைகளை அறிந்து செயல் படுவேன் 

4. நான் தன்னம்பிக்கையுடனும், அமைதியாகவும்   சூழ் நிலைகளை  சமாளிப்பேன். தேவைப்படும்போது அன்பான  வழி காட்டுதலையும் , கட்டுப்பாட்டையும்  கடை பிடிப்பேன்.

5.  என் குழந்தைகளுக்கு பொறுமை, பு ரிந்துகொள்ளுதல், பச்சாத்தாபம் மற்றும் உரியவர்களுக்கு மரியாதை 
 போன்ற குணங்களை கற்றுக்கொடுக்க நானே ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறேன்.

6. நான் எனக்கு மட்டுமே பத்திரமான, தர்க்கரீதியான   எல்லைகளை வகுத்துக் கொள்வேன்-என் குழந்தைகளுக்கு அல்ல.

7. குழந்தைகளுக்காக நேரம் செலவிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

8. என் குழந்தைகள் நேசிக்கப்  பட்ட வர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும்  விளங்க எந்த வகையான உதவி அளிக்க  வேண்டும் என்பதை நான் அறிவேன்.

9. என் குழந்தைகள் சின்னச்சின்ன  தவறு செய்ய நான் இடம் அளிக்கிறேன். அதன் மூலம் அவர்கள் வாழ்க்கை அனுபவம் அதிகரிக்கிறது. தேவைப் படும்போது அவர்களுக்கு உதவி செய்ய நான் முன் நிற்கிறேன்.

10. மற்றவர்கள் என்னை தன்னம்பிக்கை உள்ளவனாகவும், நேசிக்கும் குணமுள்ள வனாகவும், கவன முள்ளவனாகவும், அடையாளம் காட்டுகிறார்கள்.

பெற்றோர்களாக நாம் எல்லோரும் ஜெயிப்போமாக!!

Best  Wishes ,
மூர்த்தி 
 

TDR News...TDR News...TDR News...

--------------------------------------------

Dear TOSA ites / TDR ites / TDR Times readers

I thought it fit to keep you apprised of the developments at Namadhu Talainagaram in the last few days. 

·  Kaarthigai Somavaaram was celebrated at our Veera Cholan Kaasi Viswanathar temple in a very grand manner. Sangaabhishekam was also conducted on December 16, 2013 on that occasion. The event was arranged by Bhaktha Samajam formed by Sankara Mutt, TDR. Long felt dream of performing Sangaabhishekam at our Kaasi Vishwanathar temple was fulfilled on that day. Some snaps taken on that occasion are attached for your kind viewing. 
·  Laksha Deepam was performed at our பெரியகோயில்  with traditional fervour on the last Soma vaaram. Our temple wore an magnificent illuminated look on that occasion. Some snaps taken on that occasion are attached for your kind viewing. 
·  Maargazhi Maadha Bhajan has been going on in a modest way. This activity has been revived and hope to reach the level of olden / golden days in the days to come. I am thankful to SBI Venu, Raipur and S.Mali (Sundaram Doctor's son) for  sponsoring a day's Prasadam (Rs.150/- per day). 
·  krishna Manthra apartments with 28 flats was inaugurated in a grand scale. The function was well attended by all including many VIPs. Dwarakapuri itself has become a VIP colony consequent upon the inauguration. It would be pertinent to mention in this context that TOSA has played an active role in the establishment of Dwaraka puri at Mahadana Street with formation of 65 plots. The owners of plots are
·  predominantly TOSA members. Shri Seetharaman, partner of SR Estates himself is a life member of TOSA and take active interest in our activities. To put it precisely. Dwarakapuri is the telling / standing testimony,
·  vindicating the philosophy of TOSA.......Go back to the roots.......Cherish the memories......நமது ஊர்.....நமது பள்ளி.....நமது    கோயில்.
·  An outfit in the name of Bhaktha Samaajam has been formed by Sankara Mutt. I am happy to inform you all that Shri T.Krishnaswami (Appu Anna) is its founder President and the undersigned is one of the Member.   
·  Happy days are here again.......தைப் பூசம் on January 16, 2014. தேர்on ஜனவரி 15,  2014. Marudhaa Naatiyaanchali onFebruary 27, 2014.......Sivaraathri day. Let us meet on these occasions.

 Bye for the time being

--
Regards,
Individual Subramanian
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif



For Photos

Click here

Sunday, December 8, 2013

Kavithai

உலகம் உய்வித்து ஓர் பொம்மையென அதை பாவித்து 
பலகாலம் நீ விளையாடும் இடமென அடக்கி வைத்தனையோ 
நிலமும் நீரும் காற்றும் கடலும் காரணமாய் படைத்தனயோ 
கலையாத பொக்கிஷமாய் நீ இருந்து அதனுள் ஆட்டிவைத்து 
விலைமதியா மாணிக்கமாய் நிலையான ஜோதியாய் நித்தமும் 
அலைகடலின் ஆரவாரமாய் ஆதவனின் தோற்றமாய் 
மாலை மதியின் ஒளியாய் மந்தாரம் வீசிடவே அந்த 
பாலையிலும் ஓர் ஊற்றாய் அமைந்தனயோ பாவி நான் 
சிலையாய் நீ இருந்தாய் என நினைந்து நினைந்து மாய 
வலையில் வீழ்ந்தேனே அறியாமையால் - மாயவ தூயவா 
நிலையான வாழ்க்கையே நீ தந்து என்முன் வந்து 
சலியாத மனம் தந்து உன்னையே சரண் அடைய அருள்வாயே !

அண்ட  சராசரமெல்லாம் ஆளும் அரசியே காஞ்சி காமாட்சியே 
கண்டவர் விண்டதில்லை உன்னையே மகாமாயியே 
விண்ணவர் வணங்கும் வேதப்பொருளே உலக ஞானபிழம்பே 
கின்னரர் வானவர் அடிபணியும் அன்பின் வித்தே 
காருண்ய ரூபிணியே மதுரை வாழ் மீனாட்சியே உன் 
சீர் பாடும் தருணமதை தந்திடுவாய் தயை புரிந்திடுவாய் 


அலை பாயும் நெஞ்சமம்மா ஆறுதல் சொல்ல யாருமில்லை 
நிலையான வாழ்வோ இல்லை மனமோ நிலையில்லை
மலை போல் குவிந்ததம்மா தாளாத துக்கமெல்லாம் 
சிலைபோல் நின்றனயோ செதுக்கிவைத்த பதுமையோ 
விலையில்லா மாணிக்கமே தயை காட்டாயோ 
பலநாளும் உனையே மனதார நான் துதித்திடவே - மாய 
வல்யினில் நான் வீழாது காத்திடுவாய் அன்னையே என்னையே

----

இனிப்பும் கசப்பும் கலந்த வாழ்கையாடா  இது 
இறைவன் அளித்த மாறா இலக்கணமடா 
குறையோ நிறையோ அது அவன் வகுத்ததடா 
சரியோ தவறோ அது அவன் நினைத்தடா
கவலையில் பிறந்தோமே கலைகள்தான் கற்றோமே 
நிலையிலா வாழ்க்கையிலே நித்தம் தவழ்ந்தோமே 
பல நாமும் கற்றோமென செறுக்குடனே இருக்கின்றோம் 
சில நாளில் மரணம் நம்மை சூழுமென நினைந்தோமா
அலைகடல் ஆரவாரம் செய்கின்றதே ஆணவமோ 
மலைபோல் துன்பங்கள் வருகின்றதே அது விதிதானோ 
நிலையாய் நாம் இல்லையே அதுவே அறிவீலித்தனமொ 
உலகை படைத்தனனே பதில்தான் கூறாயோ
நிலம் நீர் இல்லையேல் உலகே இல்லை 
பலம் நீயே ஆண்டவா இதை யார் உணர்வார் 
சலனம் நீ மூலமும் நீ முதல்வனே நீ 
உலகமே நீயன்றோ உத்தமா அதனை காத்திடுவாய்
நெஞ்சத்தில் உறைந்தது உனது நாமம் - நீயே 
தஞ்சமேனக்கொண்டேன் தரணியில் நானே 
கெஞ்சுகின்றேன் என்னிடம் வாராயோ
கொஞ்சும் மொழி பேசாயோ கூடவே இருப்பாயோ



R.Sridharan
No Man is rich enough in this world to buy back his past!
HELP EVER
HURT NEVER

மும்பை டப்பாவாலா

சில மாதங்களுக்கு முன் மும்பை டப்பாவாலா  க்களை பற்றி எழுதி இருந்தேன்.இப்பொழுது அவர்களைப்பற்றி ஒரு  U Tube  வந்துள்ளது.சில குறிப்புக்கள்.

அன்னம் என்பது பிரம்மா .அதை நாங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறோம்.

துக்காராம் மகாராஜ் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும் என்றார் நாங்கள் கடை பிடிக்கிறோம்.

வெளிநாட்டிலிருந்து Time  Management  பற்றிcourse  நடத்த  எங்களிடம் கேட்டிருக்கிறார்கள்.



Prince Charles திருமணத்துக்கு இந்தியாவிலிருந்து 4பேர் சென்றார்கள்.அதில் 2பேர் நாங்கள்.

ஒரு டப்பாவாலா ...நான்  என் வேலையைகண்டு பயப்படமாட்டேன் பயம் ,என் குழந்தைஇடம் தான். வீடு திரும்பும் போது இனிப்பு டன் செல்லா  விட்டால் அவ்வளவுதான்.


என்ன எளிமை,என்ன உழைப்பு,என்னபொறுமை ,என்ன பணிவு எல்லாவற்றையும் விட திருப்தி,என்ன மகிழ்ச்சி     நேரில் பாருங்கள்.


Mumbai Venkataraman



நேர்மறை உறுதிமொழிகள் (Positive Affirmations)


  

நேர்மறை உறுதிமொழிகள் (Positive  Affirmations) என்பது புதிய கண்டு பிடிப்ப்பு அல்ல. நேர்மறை உறுதி மொழிகள்  என்பவை ஒரு குறிப்பட்ட நிலையில் நாம் இருக்கும்போது நம்மைப்பற்றி நாமே நம்மைச் சார்ந்த சில நேர்மறையான கருத்துக்களை நினைவில் நிறுத்தும் குணம்தான். இத்தகைய தருணங்களில் நம்மைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை களைந்து எறிய வேண்டும்.

எந்த கடின நிலையில் இருக்கும்போதும், நேர்மறை உறுதிமொழிகள் மூலம் இந்த கடின நிலையை எளிதில் கடந்து விட முடியும் என்பது திண்ணம். 

உதாரணத்துக்கு,  நாம் ஒரு தவறு செய்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.கீழ்க் கண்ட நேர்மறை உறுதிமொழிகள் மூலம் அந்த தவறின் உத்வேகத்தையும் ,நமது மனதில் ஏற்படும் மன அழுத்தத்தையும் குறைக்க முடியும்.

1. நான் ஒரு முழுமையான மனிதப் பிறவிதான். அதற்காக தவறே செய்யாதவன் கிடையாது. தவறு நடந்து விட்டது. அதனால் பரவாயில்லை.

2. தவறு என்பது வாழ்க்கையின் ஒரு அம்சம்தான். அதனால் நான் தோற்று விடுவேன் என்பது அல்ல. இது எனக்கு ஏற்பட்ட ஒரு புதிய அனுபவம்.

3.ஒரு சில சிறிய தவறுகளால் ஒரு மனிதனாக நான் யார் என்று பிறர் என்னை எடை போடுவதில்லை. ஆகவே  பெரிய மாற்றங்கள் ஏற்படாது.

4. என்னுடைய தவறுக்கு நானே முழுக் காரணம். என் தவறால் யாருக்காவது பாதிப்பு ஏற்படின், அவரிடம் மன்னிப்பு கேட்பதில் எனக்கு தயக்கமில்லை

5. என்னை முழுமையாக நேசித்து, நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ள நல்ல மனிதர்களை நான் அறிவேன், அவர்களின் மன்னிப்பை நான் பெறுவதுடன், அவர்களின் வழி காட்டலையும் நான் நாடுவேன்.

6. என் தவறால் ஏற்படும் என்னுடைய வெட்கப்படுவதிலிருந்தும், சுய வலியிருந்தும்  விடுதலை பெறும் உரிமை எனக்கு உண்டு.


ஒவ்வொரு இக்கட்டான நிலையில் நாம் நம்மை காணும்போதெல்லாம் நேர்மறை உறுதி மொழிகள் மூலமாக, கடின நிலையிலிருந்து நாம் எப்படி விடுபடலாம் என்பதை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கலாம்.

மூர்த்தி