Saturday, December 21, 2013

நேர்மறை உறுதிமொழிகள்- 2

நேர்மறை உறுதிமொழிகள்- 2 

 நம் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும் பலம் வாய்ந்த சில எளிய உண்மையான மனப்பதிவுகள் நாம் வளர்ந்த பண்பாட்டிலும் சூழ்நிலையிலும் மறைந்து கிடப்பது என்?

சின்ன வயதிலிருந்தே எனக்கு நிறையவே அன்பு கிடைத்தது. என்னை வளர்த்த  தாத்தா, பாட்,டி, பள்ளி விடுமறைகளில் மட்டுமே நான் பார்க்கும் அம்மா, அப்பா, காலையில் என் கூடவே பள்ளிக்கு வந்து, வீடு திரும்பியதும் என்னோடு விளையாடும் நண்பர்கள் - இப்படி எல்லாருமே என்மீது அபரிமிதமான அன்பு செலுத்தினார்கள். ஆனால் ஒரு நாள் பள்ளி முடிந்த பின் இரு நண்பர்களுடன் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வேளான் ஆராய்ச்சி மையத்துக்கு சென்று எப்போதையும் விட 2 மணி நேரம் தாமதமாக வீட்டுக்கு வந்ததும் அன்பு செலுத்துபவர்களே நன்றாக திட்டித் தீர்த்தார்கள். அப்போது ஏற்பட்டன - பயம், வெட்க உணர்ச்சி மற்றும் குற்ற உணர்ச்சி - அன்பில் திளைத்த எனக்கு இந்த உணர்ச்சிகள் என் ஏற்பட்டன?

ஆனால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. நான் செய்த தவறான செயலுக்காக எனக்கு தண்டனை கிடைக்க வில்லை. நான் செய்த தவறான செயலால் எனக்கு பயமோ, வெட்கமோ அல்லது குற்ற உணர்வோ  ஏற்பட வில்லை.அன்று நான் தவறு செய்ய வில்லை. என் வயதை ஒத்த சிறுவர்கள் செய்யத் துணியாத ஒரு செயலை செய்து விட்டேன். வீட்டில் சொலிவிட்டு, ஒரு மூத்தவரின் துணையோடு நான் அங்கே சென்றிருந்தால் அது சரியாக இருந்திருக்கும். அது தான் சிறுவர்களுக்கான பண்பாடு.அப்படி போவதுதான் நியதி. நான் அந்த நியதியை மீறி விட்டேன்.   எனக்கு துணிவும், மகிழ்ச்சியும் அளிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி அந்த பண்பாட்டின் பின்னணியில் ஒரு சோக சம்பவமாக மாறி விட்டது. 

அன்று மனதில் பதிந்த உண்மை - விதி  முறைகளை மீறியதால் நல்ல செயலுக்கும் பாராட்டு கிடைக்காததால், கோழையாகி விடுகிறோம்.

இதனால்தான் இப்போது  நேர்மறை உறுதிமொழிகளை வெளியே தேட வேண்டிய கட்டத்துக்கு தள்ளப் பட்டு விட்டோம்.

இப்படித்தான் நாம் நம் குழந்தைகளை  வளர்க்க வேண்டுமா?

ஒரு பெற்றோராக நாம் என்ன செய்ய வேண்டும்? 

நேர்மறை உறுதிமொழிகளை எப்படி கடைப்பிடிக்கலாம்?

கீழ்க்கண்ட  நேர்முறை உறுதி மொழிகளை பெற்றோர்களாக நாம் போராடும் தருணங்களில் மனதில் கொண்டு  ஜபிக்க வேண்டும்.

1 .நாங்கள்  ஒரு நல்ல, அன்புள்ள மற்றும் தன்னம்பிக்கையுள்ள ஒரு தாய்/தந்தை.

2. எங்கள்  குழந்தைகளை , அவர்களது தற்போதைய,   நிலையிலேயே எந்த வித நிபந்தனையு மின்றி  நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்,  அந்த அன்பை அவர்களும் எங்களுக்கு திருப்பித தருகிறார்கள்.

3.. என் குழந்தைகள் சொல்வதை கூர்ந்து கவனிப்பேன். அவர்கள் தேவைகளை அறிந்து செயல் படுவேன் 

4. நான் தன்னம்பிக்கையுடனும், அமைதியாகவும்   சூழ் நிலைகளை  சமாளிப்பேன். தேவைப்படும்போது அன்பான  வழி காட்டுதலையும் , கட்டுப்பாட்டையும்  கடை பிடிப்பேன்.

5.  என் குழந்தைகளுக்கு பொறுமை, பு ரிந்துகொள்ளுதல், பச்சாத்தாபம் மற்றும் உரியவர்களுக்கு மரியாதை 
 போன்ற குணங்களை கற்றுக்கொடுக்க நானே ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறேன்.

6. நான் எனக்கு மட்டுமே பத்திரமான, தர்க்கரீதியான   எல்லைகளை வகுத்துக் கொள்வேன்-என் குழந்தைகளுக்கு அல்ல.

7. குழந்தைகளுக்காக நேரம் செலவிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

8. என் குழந்தைகள் நேசிக்கப்  பட்ட வர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும்  விளங்க எந்த வகையான உதவி அளிக்க  வேண்டும் என்பதை நான் அறிவேன்.

9. என் குழந்தைகள் சின்னச்சின்ன  தவறு செய்ய நான் இடம் அளிக்கிறேன். அதன் மூலம் அவர்கள் வாழ்க்கை அனுபவம் அதிகரிக்கிறது. தேவைப் படும்போது அவர்களுக்கு உதவி செய்ய நான் முன் நிற்கிறேன்.

10. மற்றவர்கள் என்னை தன்னம்பிக்கை உள்ளவனாகவும், நேசிக்கும் குணமுள்ள வனாகவும், கவன முள்ளவனாகவும், அடையாளம் காட்டுகிறார்கள்.

பெற்றோர்களாக நாம் எல்லோரும் ஜெயிப்போமாக!!

Best  Wishes ,
மூர்த்தி 
 

TDR News...TDR News...TDR News...

--------------------------------------------

Dear TOSA ites / TDR ites / TDR Times readers

I thought it fit to keep you apprised of the developments at Namadhu Talainagaram in the last few days. 

·  Kaarthigai Somavaaram was celebrated at our Veera Cholan Kaasi Viswanathar temple in a very grand manner. Sangaabhishekam was also conducted on December 16, 2013 on that occasion. The event was arranged by Bhaktha Samajam formed by Sankara Mutt, TDR. Long felt dream of performing Sangaabhishekam at our Kaasi Vishwanathar temple was fulfilled on that day. Some snaps taken on that occasion are attached for your kind viewing. 
·  Laksha Deepam was performed at our பெரியகோயில்  with traditional fervour on the last Soma vaaram. Our temple wore an magnificent illuminated look on that occasion. Some snaps taken on that occasion are attached for your kind viewing. 
·  Maargazhi Maadha Bhajan has been going on in a modest way. This activity has been revived and hope to reach the level of olden / golden days in the days to come. I am thankful to SBI Venu, Raipur and S.Mali (Sundaram Doctor's son) for  sponsoring a day's Prasadam (Rs.150/- per day). 
·  krishna Manthra apartments with 28 flats was inaugurated in a grand scale. The function was well attended by all including many VIPs. Dwarakapuri itself has become a VIP colony consequent upon the inauguration. It would be pertinent to mention in this context that TOSA has played an active role in the establishment of Dwaraka puri at Mahadana Street with formation of 65 plots. The owners of plots are
·  predominantly TOSA members. Shri Seetharaman, partner of SR Estates himself is a life member of TOSA and take active interest in our activities. To put it precisely. Dwarakapuri is the telling / standing testimony,
·  vindicating the philosophy of TOSA.......Go back to the roots.......Cherish the memories......நமது ஊர்.....நமது பள்ளி.....நமது    கோயில்.
·  An outfit in the name of Bhaktha Samaajam has been formed by Sankara Mutt. I am happy to inform you all that Shri T.Krishnaswami (Appu Anna) is its founder President and the undersigned is one of the Member.   
·  Happy days are here again.......தைப் பூசம் on January 16, 2014. தேர்on ஜனவரி 15,  2014. Marudhaa Naatiyaanchali onFebruary 27, 2014.......Sivaraathri day. Let us meet on these occasions.

 Bye for the time being

--
Regards,
Individual Subramanian
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif



For Photos

Click here

Sunday, December 8, 2013

Kavithai

உலகம் உய்வித்து ஓர் பொம்மையென அதை பாவித்து 
பலகாலம் நீ விளையாடும் இடமென அடக்கி வைத்தனையோ 
நிலமும் நீரும் காற்றும் கடலும் காரணமாய் படைத்தனயோ 
கலையாத பொக்கிஷமாய் நீ இருந்து அதனுள் ஆட்டிவைத்து 
விலைமதியா மாணிக்கமாய் நிலையான ஜோதியாய் நித்தமும் 
அலைகடலின் ஆரவாரமாய் ஆதவனின் தோற்றமாய் 
மாலை மதியின் ஒளியாய் மந்தாரம் வீசிடவே அந்த 
பாலையிலும் ஓர் ஊற்றாய் அமைந்தனயோ பாவி நான் 
சிலையாய் நீ இருந்தாய் என நினைந்து நினைந்து மாய 
வலையில் வீழ்ந்தேனே அறியாமையால் - மாயவ தூயவா 
நிலையான வாழ்க்கையே நீ தந்து என்முன் வந்து 
சலியாத மனம் தந்து உன்னையே சரண் அடைய அருள்வாயே !

அண்ட  சராசரமெல்லாம் ஆளும் அரசியே காஞ்சி காமாட்சியே 
கண்டவர் விண்டதில்லை உன்னையே மகாமாயியே 
விண்ணவர் வணங்கும் வேதப்பொருளே உலக ஞானபிழம்பே 
கின்னரர் வானவர் அடிபணியும் அன்பின் வித்தே 
காருண்ய ரூபிணியே மதுரை வாழ் மீனாட்சியே உன் 
சீர் பாடும் தருணமதை தந்திடுவாய் தயை புரிந்திடுவாய் 


அலை பாயும் நெஞ்சமம்மா ஆறுதல் சொல்ல யாருமில்லை 
நிலையான வாழ்வோ இல்லை மனமோ நிலையில்லை
மலை போல் குவிந்ததம்மா தாளாத துக்கமெல்லாம் 
சிலைபோல் நின்றனயோ செதுக்கிவைத்த பதுமையோ 
விலையில்லா மாணிக்கமே தயை காட்டாயோ 
பலநாளும் உனையே மனதார நான் துதித்திடவே - மாய 
வல்யினில் நான் வீழாது காத்திடுவாய் அன்னையே என்னையே

----

இனிப்பும் கசப்பும் கலந்த வாழ்கையாடா  இது 
இறைவன் அளித்த மாறா இலக்கணமடா 
குறையோ நிறையோ அது அவன் வகுத்ததடா 
சரியோ தவறோ அது அவன் நினைத்தடா
கவலையில் பிறந்தோமே கலைகள்தான் கற்றோமே 
நிலையிலா வாழ்க்கையிலே நித்தம் தவழ்ந்தோமே 
பல நாமும் கற்றோமென செறுக்குடனே இருக்கின்றோம் 
சில நாளில் மரணம் நம்மை சூழுமென நினைந்தோமா
அலைகடல் ஆரவாரம் செய்கின்றதே ஆணவமோ 
மலைபோல் துன்பங்கள் வருகின்றதே அது விதிதானோ 
நிலையாய் நாம் இல்லையே அதுவே அறிவீலித்தனமொ 
உலகை படைத்தனனே பதில்தான் கூறாயோ
நிலம் நீர் இல்லையேல் உலகே இல்லை 
பலம் நீயே ஆண்டவா இதை யார் உணர்வார் 
சலனம் நீ மூலமும் நீ முதல்வனே நீ 
உலகமே நீயன்றோ உத்தமா அதனை காத்திடுவாய்
நெஞ்சத்தில் உறைந்தது உனது நாமம் - நீயே 
தஞ்சமேனக்கொண்டேன் தரணியில் நானே 
கெஞ்சுகின்றேன் என்னிடம் வாராயோ
கொஞ்சும் மொழி பேசாயோ கூடவே இருப்பாயோ



R.Sridharan
No Man is rich enough in this world to buy back his past!
HELP EVER
HURT NEVER

மும்பை டப்பாவாலா

சில மாதங்களுக்கு முன் மும்பை டப்பாவாலா  க்களை பற்றி எழுதி இருந்தேன்.இப்பொழுது அவர்களைப்பற்றி ஒரு  U Tube  வந்துள்ளது.சில குறிப்புக்கள்.

அன்னம் என்பது பிரம்மா .அதை நாங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறோம்.

துக்காராம் மகாராஜ் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும் என்றார் நாங்கள் கடை பிடிக்கிறோம்.

வெளிநாட்டிலிருந்து Time  Management  பற்றிcourse  நடத்த  எங்களிடம் கேட்டிருக்கிறார்கள்.



Prince Charles திருமணத்துக்கு இந்தியாவிலிருந்து 4பேர் சென்றார்கள்.அதில் 2பேர் நாங்கள்.

ஒரு டப்பாவாலா ...நான்  என் வேலையைகண்டு பயப்படமாட்டேன் பயம் ,என் குழந்தைஇடம் தான். வீடு திரும்பும் போது இனிப்பு டன் செல்லா  விட்டால் அவ்வளவுதான்.


என்ன எளிமை,என்ன உழைப்பு,என்னபொறுமை ,என்ன பணிவு எல்லாவற்றையும் விட திருப்தி,என்ன மகிழ்ச்சி     நேரில் பாருங்கள்.


Mumbai Venkataraman



நேர்மறை உறுதிமொழிகள் (Positive Affirmations)


  

நேர்மறை உறுதிமொழிகள் (Positive  Affirmations) என்பது புதிய கண்டு பிடிப்ப்பு அல்ல. நேர்மறை உறுதி மொழிகள்  என்பவை ஒரு குறிப்பட்ட நிலையில் நாம் இருக்கும்போது நம்மைப்பற்றி நாமே நம்மைச் சார்ந்த சில நேர்மறையான கருத்துக்களை நினைவில் நிறுத்தும் குணம்தான். இத்தகைய தருணங்களில் நம்மைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை களைந்து எறிய வேண்டும்.

எந்த கடின நிலையில் இருக்கும்போதும், நேர்மறை உறுதிமொழிகள் மூலம் இந்த கடின நிலையை எளிதில் கடந்து விட முடியும் என்பது திண்ணம். 

உதாரணத்துக்கு,  நாம் ஒரு தவறு செய்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.கீழ்க் கண்ட நேர்மறை உறுதிமொழிகள் மூலம் அந்த தவறின் உத்வேகத்தையும் ,நமது மனதில் ஏற்படும் மன அழுத்தத்தையும் குறைக்க முடியும்.

1. நான் ஒரு முழுமையான மனிதப் பிறவிதான். அதற்காக தவறே செய்யாதவன் கிடையாது. தவறு நடந்து விட்டது. அதனால் பரவாயில்லை.

2. தவறு என்பது வாழ்க்கையின் ஒரு அம்சம்தான். அதனால் நான் தோற்று விடுவேன் என்பது அல்ல. இது எனக்கு ஏற்பட்ட ஒரு புதிய அனுபவம்.

3.ஒரு சில சிறிய தவறுகளால் ஒரு மனிதனாக நான் யார் என்று பிறர் என்னை எடை போடுவதில்லை. ஆகவே  பெரிய மாற்றங்கள் ஏற்படாது.

4. என்னுடைய தவறுக்கு நானே முழுக் காரணம். என் தவறால் யாருக்காவது பாதிப்பு ஏற்படின், அவரிடம் மன்னிப்பு கேட்பதில் எனக்கு தயக்கமில்லை

5. என்னை முழுமையாக நேசித்து, நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ள நல்ல மனிதர்களை நான் அறிவேன், அவர்களின் மன்னிப்பை நான் பெறுவதுடன், அவர்களின் வழி காட்டலையும் நான் நாடுவேன்.

6. என் தவறால் ஏற்படும் என்னுடைய வெட்கப்படுவதிலிருந்தும், சுய வலியிருந்தும்  விடுதலை பெறும் உரிமை எனக்கு உண்டு.


ஒவ்வொரு இக்கட்டான நிலையில் நாம் நம்மை காணும்போதெல்லாம் நேர்மறை உறுதி மொழிகள் மூலமாக, கடின நிலையிலிருந்து நாம் எப்படி விடுபடலாம் என்பதை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கலாம்.

மூர்த்தி 


Monday, November 25, 2013

You will achieve!!



ரொம்ப நாளைக்குப் பின்னர் ஸ்ரீதர் எழுதியிருக்கிறார். அது என்னவோ அவரது எழுத்துக்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தான் போகின்றன. நீர்வீழ்ச்சி போல சரளமாக சொற்கள் வந்து விழுகின்றன. எனக்கு நல்லாகவே தெரியும். அன்று டாக்டர். சாந்தாவுடன் கிட்டத்தட்ட 20 நிமிஷங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஸ்ரீதர் எதையுமே நோட் எடுத்துக் கொள்ள வில்லை. ஆனால் ஒரு விஷயம் கூட விடாமல் அப்படியே எங்கள் சம்பாஷணையை பதிவு செய்திருக்கிறார். 

ஒரு இயக்கம் வெற்றி பெற, அந்த இயக்கத்தைச்  சார்ந்த ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க வேண்டும். AMBITION is the keyword. நாம் வெற்றி பெற வேண்டும்  எனற பேராசை நமது உந்து சக்தியாக இருக் கவேண்டும், இந்த ambition -அவ்வப்போது  உள்ளிருக்கும் அந்த ஜூவாலையை வெளியே உமிழ வைக்க வேண்டும். பெரியதாக கனவு காண வேண்டும்.

இருபது வருஷங்களுக்கு முன்பெல்லாம் DREAMING BIG பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. சில network marketing கூட்டங்களுக்கு ( விடாப்பிடி நண்பர்களுக்காக ) சென்ற அனுபவம் உண்டு. பேச்சாளர் கேட்பார் ," நீங்கள் மாதம் எவ்வளவு ரூபாய் சம்பாதிக்க விரும்புகிறீர்கள் ? "

ஒருவர் சொல்வார்," 10000 ரூபாய் ."

இன்னொரு பெண்மணி சொல்வார் ," 20000ரூபாய் ."

"உங்கள் கனவு இவ்வளவுதானா?"

திடீரென ஒரு குரல் எழும்பும்,"  ஒரு லட்சம் ரூபாய்."

" கொஞ்சம் பரவாயில்லை."

மீண்டும் ஒரு குரல் கேட்கும் ," ஒரு கோடி ரூபாய்."

பேசுபவருக்கு இவர் குரல் மட்டுமே நன்றாகக் கேட்டது.

" வெரி  குட் , நில்லுங்க சார். உங்க பெயர், ஊரைச் சொல்லுங்க"

" திலீப் from நாகர்கோவில் "

" வாழ்த்துக்கள் திலீப், கண்டிப்பாக நீங்கள் சம்பாதிப்பீர்கள்.". 

இதை யெல்லாம் dreaming big என்று சொல்ல முடியாது. நண்பருக்காக உட்கார்ந்து விட்டு வர வேண்டியதுதான்.


நாம் பேசுவதுக்கு முன்னர் - பிறர் பேசுவதை கவனிக்கலாமே!
நாம் பதில் செயல் செய்யும் முன்னர் - சற்றே யோசிக்கலாமே !
நாம் செலவு செய்யும் முன்னர் - கொஞ்சம் சம்பாதிக்கலாமே !
நாம் கண்டனம் செய்யும் முன்னார்  - சற்றே காத்திருக்கலாமே !
நாம் கடவுளை வணங்கும் முன்னர் - சற்றே மன்னிக்கலாமே
நாம் விலகலாம் என்னும் முன்னர் - ஒரு முறை முயற்சிக்கலாமே!

Earnest Hemingway கூறிய ஆறு தாரக மந்திரங்கள். 

ரொம்பவும் கவனித்து,யோசித்து,காத்திருந்து,முயற்சித்ததின் விளைவு   விலகக்கூடாது என்ற எண்ணம்  உதித்தது. டிசம்பர் 27-ம் தேதி TOSA  sponsor செய்யும் cancer awareness programme நடைபெற இருக்கிறது. அடையார் கான்சர் இன்ஸ்டிட்யூட்டுடன்  சேர்ந்து நடத்தப்படும் நிகழ்ச்சி.

நிறைய பேர் ' தாம் எப்படிப்பட்டவர் ' என்பதை குறைவாக மதிப்பிடுகிறார்கள். ' தாம்  எப்படிப் பட்டவர் அல்ல' என்பதை அதிகமாக மதிப்பிடுகிறார்கள். இதை மாற்றிக்கொண்டால்தான் சாதனையாளர் ஆக முடியும். சொல்லப் போனால் பெரிய கனவுகள் காண முடியும்;

நாம் எப்படிப் பட்டவர்கள் என்பதை அதிகமாகவே மதிப்பிட்டுக் கொள்ளலாம். ஏனெனில் we know that  we all deserve it. 

சென்னையில் இருக்கும் தோசா நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஆளுக்கு 20 பேர்களை volunteer ஆக ரெடி செய்யுங்கள். 27-ம் தேதி cancer  awareness கூட்டத்துக்கு அழைத்து வாருங்கள். ஒரு மிகப் பெரிய சமூகக் கடமை காத்துக் கிடக்கிறது. TOSA  -வின் பெருமையை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்ற நம் எல்லாருடைய ஒத்துழைப்பும் தேவை. 

இதைப் படித்த உடனேயே நீங்கள் செயலில் இறங்குவீர்கள் என்பது நிச்சயம்.

நன்றியுடன் ,

Murthy  


Kavithai

என்னுள் உணர்வுகள் ஆயிரம் ஆயிரம் எனினும்
உன்னால் உள்ளேன் என்பது புரிந்தது கண்ணா
முன்னாள் ஏதோ யான் அறியேன் - அறியேன்
பின்னால் நடக்கும் நாடகம் எதேன்றும் - என்றும்
உன்னையே நம்பினேன் வாழ்கின்றேன் அய்யனே
என்னையே நம்பி வாழும் நாளும் வந்திடாதோ
பூவுலகம் உனக்கென்று படைத்தனயோ இறைவா
கூவும் குயிலும் இசை பாட உன் புகழை - மேலும்
பூத்து குலுங்கும் மலர் தோட்டம் அமைதனயோ
கொத்தாக மலர்களும் உனக்கென்று வைத்தனையோ
சொத்தாக உன்னை நான் பாவித்தேன் எனக்கென்ன
வைத்தனை நீ அறியேன் யான் எனினும் உன்னையே
நித்தமும் வாயார பாட வழி வகுப்பயோ இறைவா நீ!
கண்ணீர் மல்குதையா உன்னையே நினைக்கயிலே
தண்ணீரும் வேண்டேன் உன் தயைதான் இருக்கையிலே
உண்ணும் உணவும் வேண்டேன் என்றும் வேண்டி நின்றேன்
உன் திருவருளைத்தான் என்றுதான் தருவாயோ அதனை
பன்னீர் மணக்கும் சன்னிதியே உனதன்றோ பாவியேன்
என்னை  மறவாய் என் நாரணனே என்றுமே !
உலகம் படைத்தனை அதில்தான் 
பல உயிர்கள் கொடுத்தனை அதனையே 
சிலகாலம் வாழ்வதற்கே நீயே பணித்தனை 
நிலம்தான் அதில் வைத்தனை நீரும் 
கலந்தனை அதிலே நெருப்பும் இட்டனை 
நீல வானம் மேலே நிறுத்தினை 
சில்லென்ற காற்றினை வீசவிட்டாயே 
கொல்லென்று சிரித்தனயோ என்றுமே 
நில்லாத நாடகம்தனை நடத்தினயோ 
பொல்லாத மனித பொம்மைகள் செய்தனையோ 
கல்லாத மனம் ஒன்றை  கற்க விட்டனையோ 
சொல்லாத வார்த்தைகள் சொல்ல வைத்தனையோ 
எல்லாமே உனதென்றால் உனக்கென்ன பெருமை 
நில்லாமல் ஓடி வா பதில் கூற வா நீயே 
கல்லாக இல்லாமல் உயிர் பெற்று வா ஆண்டவனே !
உருகுகின்ற உள்ளமதில் உண்மையாய்குடிகொள்வாய்
மருகனென்ற பெயருக்கோ இலக்கணமாய் நீநின்றாய்
முருகா என அழைத்திட்டால் முன்னம் வந்துநிற்பாய்
அருகில் நீ இருக்க அடியேனுக்கு என்ன பயம்அய்யா !

திருத்தணி முருகா தித்திக்கும் முதல்வா நீயே
செருக்கழிக்கும் திருக்குமரனன்றோ நீ அபயம்
தருவாயே தருணத்தில் உன்னை நினைந்தால்
வருவாய் மயில் ஏறி மனத்தில் நீ நிறைவாயே

உருக்குலைந்து நான் போகும் முன்னே என்னுள்
அருமருந்தாய் வாராயோ துயரம்தனைதீராயோ
கருமுகில் கண்ணனின் மருகோனே கந்தாகடம்பா
திருவருள்தான் சுரப்பாயோ என் சுப்ரமண்யா
இனிய நண்பர்களே !
ஓசையிலிருந்து பிறந்ததுதான் இசை  எந்நாட்டவருக்கும் பொது உடமை இசை  பிரமத்திலிருந்து பிறந்தது நாத பிரம்மம்   சிவனுக்கு உகந்தது நந்தியின் தாளம் அந்த தாளத்தின் தாளமே இசைக்கு அடித்தளம்  உலகத்தில் எந்த மூலையிலும் இசை ஒலித்தாலும் அதன் அடித்தளம் அந்த நாதம் தான் அதிலே வேறுபாடே இல்லை  . இதற்க்கு அத்தாட்சியாக இத்துடன் அனுப்பியுள்ள ஒளி நாடாவின் ஒலியை எல்லோரும் பார்த்து அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் உண்மை - ஒலி ஒளி என்பது அந்த இறைவனுக்கு சொந்தமான பொருள் அதிலிருந்துதான் நாம் நம்முடைய சுயநலத்திற்காக எடுத்துக்கொண்டு அனுபவிக்கிறோம் என்பது துலங்கும் ! என்னைப்பொருத்தவரை எல்லோரும் இந்த உண்மையை அமோதிப்பீர்கள் என நம்புகிறேன் ! தங்கள் கருத்தை தயை கூர்ந்து எதுவாயினும் எழுதவும் !

இறையவனே இசைக்கு உரிமையாளன் !

ஸ்ரீதரன் ரிசர்வ் வங்கி



R.Sridharan
No Man is rich enough in this world to buy back his past!
HELP EVER
HURT NEVER



–Amazing precision drumming 
watch till the end!

 
 
                        http://vimeo.com/20408504





R.Sridharan
No Man is rich enough in this world to buy back his past!
HELP EVER
HURT NEVER

மனம் போன போக்கிலே


குழைந்தையும் தெய்வமும் ஒன்று என பல நூல்களில் படித்திருக்கிறோம் .அனுபவித்திருக்கிறோம்.குழந்தை கள்ளம் கபடம் அற்றது. போட்டி பொறாமையில் சிக்காதது.எப்பொழுதும் புன்னகை.யாரிடமும் பேதம் கிடையாது.தம் சக வயதினரிடம் நட்பு.பிறரை ஈர்க்கும் சக்தி.அவர்களின் விஷமங்களைக்கண்டு நாம் கோபப்படுவதில்லை.மாறாக ரசிக்கிறோம்.

பகைவர்களை இணைக்கும் சக்தி.உதாரணம், பெற்றோர் சம்மதமின்றி பையன் மணம்செய்து கொள்கிறான். பெற்றோர் கொதித்து எழுந்து ,சபித்து ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.சிறிது நாள் கழிந்து குழந்தை பிறக்கிறது.பெற்றோர் மனதில் பேரனுக்காக சபலம்.இறுக்கம் தளருகிறது.குழந்தையை கொஞ்ச வருவதுபோல் நாடகமாடி ,மனம் மாறி இணைகிறார்கள்.பல வருஷங்களுக்கு முன் வந்த தமிழ் படத்தில் மூன்று திருடர்கள் குழந்தையை கடத்துகிறார்கள்.பேரம் நடக்கிறது.இடையில் பாசமும் பிறக்கிறது.குழந்தைக்கு சுகமில்லை.மருந்து வாங்கும்போது போலீஸ் மோப்பம் பிடித்து ,முடிவில் பிடிபடுகிறார்கள்.திருந்தவும் சபதம் செய்கிறார்கள்.போலீஸ் ஜீப்பில் ஏறும்போது குழந்தை கதறுகிறது.திருடர்களும் தான்.படம் பார்த்தவர்களும் உணர்ச்சி வசப்பட்டார்கள்.படத்தில் நடித்த மனோகர் ,படக்காட்சி முடிந்த பின்னும் பல நிமிடங்கள் உணர்ச்சியில் தத்தளித்ததாக கூறினார்.
மகாபாரதத்தில் கண்ணன் நடத்திய நாடகங்களையும் சூழ்ச்சிகளையும் நாம் ஒப்புக்கொள்ளவில்லை தான் .ஆனால் குழந்தை  கண்ணனை யார் தான் ரசிக்கவில்லை?ஊத்துக்காடு வேங்கடகவி எப்படி அனுபவித்தார் என்று பார்ப்போம்
.



























பண்டைய காலத்தில்,ஏன் இப்பவும் இயற்கை படைப்புகளை தெய்வமாக வழிபடுவதை அறிவோம்.பூமி,நதிகள்,காற்று ,அக்னி,பறவைகள் பசு ,பாம்பு,குரங்குமுதலியவற்றை கூறலாம். ஏன் எலிக்கு கூட கோயில் உண்டு.பாகவதத்தில்,கண்ணன் கோவர்த்தன கிரி சம்பவத்தில்,மக்களை"இந்திரனுக்கு ஏன்  விழா எடுக்க வேண்டும்? மழைபெய்ய வைக்கவேண்டியது அவன் கடமை.மழைக்கு காரணம் மலைதான்.அதை கொண்டாடுங்கள் என்று உபதேசிக்கிறார்..பின் இந்திரன் கோபம் பின் விளைவுகள நாம் அறிந்ததே.

ஒரு டி .வி பே ட்டியில் ஆதிவாசிகள் வௌவாலுக்கு விழா எடுக்கிறார்கள் என அறிந்தேன்.காரணம்," அவைகள் தான் விதை களை பல இடங்களில் பரப்பி ,அதனால் காடுகள் பெருகி ,அதனால் மழை 


பெருகி வளம் பெறுகிறது.எனவே நன்றிக்கடனாக விழா எடுக்கிறோம்" இது மூட  நம்பிக்கையா? நம்மை விட அறிவாளிகள்.
மற்றொரு நிகழ்ச்சி.விவேகானந்தர் உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத மகாராஜா விற்கு உணர்த்த,அவருடைய உருவப்படத்தின் மேல் எச்சில் துப்ப சொல்லி, பணியாளரை அழைத்ததும் அவர் மறுத்ததும்,ராஜாவுக்கு உருவ வழிபாட்டின் தத்துவத்தை உணர்த்தியுதையும் நாம் அறிவோம்.

மற்றொரு கேள்வி. கடவுளுக்கு ஏன் இத்தனை உருவங்கள்,இத்தனை நாமங்கள். " நான் ஒருவன் தான் ஆனால்,தந்தைக்கு மகன்,பிள்ளைக்கு தந்தை,....சகோதரன் மாமன் மச்சான் மாணவன்,ரயில் நிலையத்தில் பிரயாணி,மருத்துவ மனையில் நோயாளி,சிறையில் கைதி,வங்கியில் வாடிக்கையாளர்,கோவிலில் பக்தன்................... வாயடைத்தவர் நம் பாலகிருஷ்ண சாஸ்திரிகள்.
சமீப காலத்தில் கூடதரிசனம் கண்டவர்கள்  தியாகராஜ சுவாமிகள்,வள்ளலார்..பின்னவருக்கு நடராஜ பெருமான் தரிசனம் தந்தார்.ஆனால் வள்ளலார் அழுது அரற்றினார்,பெருமான் காரணம் கேட்டதற்கு இந்த தரிச னம்  உலகில் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லையே என விடையளித்தார்.அவர் பாடல்கள் முழுவதும் ஆன்மீகத்தையு,ம் ,நன்னேரிகளை உணர்த்தவும் உலக நன்மைக்காகவும்,பகரப்பட்டவை.இறைவனிடம் என்ன வேண்டுகிறார். ஒரு பாடலை பார்ப்போம்.


அண்மையில் கண்ணன் தரிசனம் கண்டவர் அவிந்தர்.பதிவு செய்திருப்பவர் பாரதியார்.அவரே கண்டவர்தானே .அவர் கவிதைகளே அதற்கு  சான்று.

மனம் அது போன போக்கில் போகும்.


 Mumbai Venkataraman

Saturday, November 16, 2013

சான்றோரை சந்தித்தோம்



நமது தோசா அமைப்பு உருவான இரண்டாவது ஆண்டே நமது தலைவர் திரு.மூர்த்தி சார் அவர்கள் நமது தொடர்புக்கு வந்தவர். முதலாம் ஆண்டு நமது அமைப்பின் நிகழ்ச்சியில் ஒரு சாதாரண பார்வையாளராவே பங்கேற்ற அவர் தோசாவினால் கவரப்பட்டு உடனடியாக அதன் ஒரு உறுப்பினராகி அடுத்த ஆண்டே அதன் தலைமை பொறுப்பினை ஏற்று இன்று நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறார்.

தோசாவின் அமைப்பு முழுக்க முழுக்க ஒரு கூட்டு தலைமை மற்றும் செயலாக்கம் (collective efforts). அன்று முதல் இன்று வரையில் நமது அமைப்பின் செயல்பாடுகளை பார்த்தால் நமக்கே பல  பிரமிப்பான மலரும் நினைவுகள்  நம்    மனதில் நிழலாடி நம்மை மகிழ்ச்சி கடலில் சங்கமிக்க வைக்கும்.

ஆம் முதல் சில ஆண்டுகள் சிர்சிறிய பொருள்களை நமது பள்ளிக்கு வழங்கியது. பின்னர் . நம் பள்ளியின் முன்னாள் மாணவர்களால் endowment அமைத்தது. பள்ளியில் பல நிகழ்சிகளை நடத்தியது. குறிப்பாக வானிலையாளர் முனைவர் திரு ரமணன் மற்றும் மக்கள் அரங்கம் முலமாக நம் மருதூரை உலகறிய செய்தது.

நம்  மகாலிங்க பெருமானின் கிருபையாலும், குருமஹா  சன்னிதானத்தின்  ஆசியாலும்  குமாரி அர்ச்சனா அவர்களின் ஊக்கத்தின்  காரணமாக முதன்   முதலாக  நமது ஊர் கோயிலில் ஊரே வியக்கும் வண்ணம் மருத நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது. மிக குறுகிய காலத்தில் பரத கலைஞர்களிடையே போட்டி ஒரு கெளரவம் நம்   மருத நாட்டியாஞ்சலியில் மேடைஏறுவதில். 

திரைப்பட இயக்குனர் திரு விசு அவர்கள் தனது திருமண நாளினை திருவிடைமருதூரில்    கொண்டாட விரும்பினார். தோசாவும் தோள் கொடுத்தது. சிறப்பாக நடந்தது அந்த வைபவம் அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையில் நம் தலைவர் அவர்கள் இரண்டு கருத்துக்களை சொல்லி நம் தோசா அதனை நோக்கி பயணித்தால் சிறப்பு பெரும் என்றார்.

நாம்  நமது பள்ளிக்கு சில சேவைகளை செய்து வருகிறோம் இது தொடர்ந்து இன்னும் சிறப்பாக நடக்கும். நமது ஊர் கோயிலுக்கு மருத நாட்டியாஞ்சலி நடைபெற்று வருகிறது  இதிலும் இன்னும் பல சிறப்பான பல வேலைகளை செய்ய இருக்கிறோம்.அடுத்ததாக நமது ஊருக்கு என்று சில சேவைகளை செய்யவேண்டும்.

குறிப்பாகநமது ஊர் பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்

 உயர்  மருத்துவத்தில்  ஒரு சேவையினை செய்யலாம்.

பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய் தாக்கம் குறித்து ஒரு விழிப்புணர்வு இயக்கம் நடத்த வேண்டும். மார்பக புற்று நோய் மற்றும் கருப்பை புற்று நோய். இந்த இரண்டு நோய்களை மட்டும்   முன்பே அறிந்து கொண்டால் சிகிச்சை உண்டு மரணத்திலிருந்து காப்பாற்றலாம் முழுவதும் குணமாகி நீண்ட நாள் வாழலாம்,

எனவே பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய் குறித்து நாம் விழிப்புணர்வு இயக்கம் ஒன்று நடத்தலாம். எனக்கு சென்னை அடையாறு  கேன்சர் இன்ஸ்டியுட் - ல்  ஒரு நல்ல அறிமுகம் உள்ளது  அதன் மூலமாகவே இதனை  செய்ய  முடியும் என்று கூறினார்

சில காலமாகவே இது குறித்த  சிந்தனைக்கும் மற்றும்  தலைவரின் விடா முயற்சியினாலும் இன்று அடையாறு கேன்சர் இன்ஸ்டியுட்-ல் இது குறித்து ஒரு மருத்துவரிடம் கலந்துரையாடலுக்கு  தோசாவுக்கு   நேரம் ஒதுக்கி அந்த தகவலையும் தலைவருக்கு தெரிவித்து இருந்தார்கள்.

குறிப்பாக நமது மூர்த்தி சாரின்  மனைவியின்  சஹோதரர்  திரு. ரமணி அவர்கள் அடையாறு கேன்சர் இன்ஸ்டியுட்-ல் நீண்ட நெடுங்காலம் சேவை செய்தவர். 

தலைவர் மூர்த்தி  சார்,    திரு. ரமணி சார், திரு T. S.V மற்றும்  செயலாளர் பாலகௌரி  ஆகியோருடன்  காலை சுமார் பத்தரை மணியளவில் கேன்சர் இன்ஸ்டியுட்டின் மருத்துவர் அறையில் ஆஜர். அறையில்  இடமின்மை காரணமாக மருத்துவரே தனது நாற்காலியினை எடுத்து வந்து எங்களுடன் அமர முதலில் அனைவரும் அறிமுகம்

 இங்கு வந்ததன் நோக்கம் ஆகியவைகளை மூர்த்தி சார் அவர்கள் எடுத்துரைத்தார்

பின்னர் மருத்துவர்  எங்களிடம் பேச ஆரம்பித்தார்.

கேன்சர் அல்லது புற்று நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா

புற்று நோய் என்பது என்ன, எதனால் ஏற்படுகிறது, அதற்கான அறிகுறிகள் என்னென்ன, எப்படி கண்டு பிடிக்கலாம் எவ்வாறு  கட்டுபடுத்தலாம்  ஆரம்ப நிலை புற்றுநோயினை முற்றிலும் குணப்படுத்தி விடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? புற்று நோய் வராமல் தடுப்பது எப்படி நீங்கள் எவ்வாறு கேன்சர் இன்ஸ்டியுட்டிற்கு உதவி செய்ய இருக்கிறீர்கள்.  கேன்சர் இன்ஸ்டியுட் உங்களுக்கு என்னென்ன உதவியினை செய்து கொடுக்கும் 

முதலில் நீங்கள் என்னென்ன செய்யவேண்டும் .மக்களை எப்படி அணுக வேண்டும் எப்படி விளம்பரம் செய்ய வேண்டும்  மக்களுக்கு என்னென்ன ஏற்பாடுகளை செய்யவேண்டும்இப்படி மிக மிக குறுகிய நேரத்தில்  பற்ப்பல விஷயதானம்

பின்னர் திரு ரமணி சார் அவர்கள் தனது boss அதாவது கேன்சர் இன்ஸ்டியுட்டின் இயக்குனர் திருமதி டாக்டர் சாந்தா அவர்களை காண தான் மட்டும் சென்றார்.

கேன்சர் இன்ஸ்டியுட்டின் கடைசி மொட்டை மாடியில் ஒரு சாதாரண அறை அவரது அறைக்கு முன்னர் தென்னை ஓலையில் வேயப்பட்ட ஒரு குடிசை அனைவரும் அங்கு நின்று கொண்டிருந்தோம்.  

டாக்டர் சாந்தா அவர்களது  வயது முதுமை காரணமாக  அவரை காண முக்கியமான  சில நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை தவிர யாரும் பார்ப்பதற்கு அனுமதியில்லை.


உள்ளே சென்ற  ரமணி சார் முதலில் மூர்த்தி சார் அவர்களை உள்ளே அழைத்தார். 

ஆர்வ கோளாறு காரணமாக நான் சற்றே எட்டி பார்க்க பாலகௌரியும்  அப்படியே தொடர உள்ளிருந்து சற்றே முதுமை தெரிந்தாலும்   ஒரு கம்பீர குரல்

“எல்லோரும் உள்ளே வாருங்கள்.”

அனைவரும் ஓடிச்சென்று அவர்முன் கைகூப்பி நின்றோம்............ ,

“முதலில் உட்காருங்கள் நான்தான் சாந்தா”  என்றார்.

மிக மிக எளிமையான நாற்காலிகள் அறை முழுவதும் ஒரே விருதுகளும், சான்றிதழ்களும், புகைப்படங்களும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை   முதல் J R D Tata வரை

அவர் ஒரு சிறிய பெரம்பு  நாற்காலியில் அமர்ந்திருந்தார்  

எங்களை பார்த்து

“கான்சர் ஒரு உயிரை கொல்ற வியாதின்னு நெனைச்சுண்டு மொதல்ல நீங்க யாரும் பயப்பட வேண்டாம் நீங்க எல்லாரும் அந்த பயத்த மொதல்ல விடுங்கோ ஜனங்களுக்கு ஏதாவது சேவை செய்யனூன்னு நீங்கள்ல்லாம் இங்க வந்திருக்கேள்  பாருங்கோ அதான் நேக்கு ரொம்ப முக்கியம். 
அறுபது வருஷத்துக்கு  முன்னாடி இத ஆரம்பிச்ச அப்ப இருந்த நிலை  இன்னிக்கு இல்ல நெறைய மருந்து இருக்கு உங்கள மாறி மனுஷாலெல்லாம் என்னோட சென்தேள்னா இன்னும் நெறையா பண்ணலாம் கான்சருக்கு எப்படி ஏழை பணக்காரன்னு வித்யாசம் கெடையாதொ அப்படியே தான்  
இங்க வைத்தியத்திலேயும் எந்த வித்யாசமும் கெடையாது. எல்லாருக்கும் வைத்தியம் உண்டு 

ஏழைகளுக்கு இலவசமாகவே சில வைத்தியமும் உண்டு நீங்கலெல்லாம் ஒங்க ஊரு பெண்களுக்கு   இந்த சேவைய கொண்டு போறதுல எனக்கு ரொம்ப   சந்தோஷம் என்னால எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நானும் ஒத்தாச பண்றேன்  நல்லது எனக்கு இன்னும் பல வேலை இருக்கு ஒங்கள இன்னிக்கு பாத்ததுல ரொம்ப சந்தோசம் எல்லோரும் போய் இதை பத்தி பிரச்சாரம் பண்ணுங்கோ ஜனங்களுக்கு ஒதவி பண்ணுங்கோ கடவுள் நம்ம கூடவே எப்போதும் இருப்பார்”

அனைவரும் விடைபெற்றோம்

எனக்கு அப்போது ஒரு மாபெரும் மனநிறைவு என்னென்று சொல்வது அன்னை சாரதா தேவியினை தரிசித்து விட்டு வருவது போல் இருந்தது.

இன்று நாம் அனைவரும் ஒரு சான்றோரை சந்தித்தோமா  அல்லது அன்னை சாரதையினை  சந்தித்தோமா என்று அதே சிந்தனையுடன் இதனை இன்று   எழுதினேன்

விடைபெறும் முன்  பாலகௌரி ……..அம்மா உங்களுடன் ஒரே ஒரு போட்டோ என்று கேட்க

சரி ஏன் எல்லோரும் நில்லுங்கோளேன்


ஸ்ரீதர்