Monday, November 25, 2013

மனம் போன போக்கிலே


குழைந்தையும் தெய்வமும் ஒன்று என பல நூல்களில் படித்திருக்கிறோம் .அனுபவித்திருக்கிறோம்.குழந்தை கள்ளம் கபடம் அற்றது. போட்டி பொறாமையில் சிக்காதது.எப்பொழுதும் புன்னகை.யாரிடமும் பேதம் கிடையாது.தம் சக வயதினரிடம் நட்பு.பிறரை ஈர்க்கும் சக்தி.அவர்களின் விஷமங்களைக்கண்டு நாம் கோபப்படுவதில்லை.மாறாக ரசிக்கிறோம்.

பகைவர்களை இணைக்கும் சக்தி.உதாரணம், பெற்றோர் சம்மதமின்றி பையன் மணம்செய்து கொள்கிறான். பெற்றோர் கொதித்து எழுந்து ,சபித்து ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.சிறிது நாள் கழிந்து குழந்தை பிறக்கிறது.பெற்றோர் மனதில் பேரனுக்காக சபலம்.இறுக்கம் தளருகிறது.குழந்தையை கொஞ்ச வருவதுபோல் நாடகமாடி ,மனம் மாறி இணைகிறார்கள்.பல வருஷங்களுக்கு முன் வந்த தமிழ் படத்தில் மூன்று திருடர்கள் குழந்தையை கடத்துகிறார்கள்.பேரம் நடக்கிறது.இடையில் பாசமும் பிறக்கிறது.குழந்தைக்கு சுகமில்லை.மருந்து வாங்கும்போது போலீஸ் மோப்பம் பிடித்து ,முடிவில் பிடிபடுகிறார்கள்.திருந்தவும் சபதம் செய்கிறார்கள்.போலீஸ் ஜீப்பில் ஏறும்போது குழந்தை கதறுகிறது.திருடர்களும் தான்.படம் பார்த்தவர்களும் உணர்ச்சி வசப்பட்டார்கள்.படத்தில் நடித்த மனோகர் ,படக்காட்சி முடிந்த பின்னும் பல நிமிடங்கள் உணர்ச்சியில் தத்தளித்ததாக கூறினார்.
மகாபாரதத்தில் கண்ணன் நடத்திய நாடகங்களையும் சூழ்ச்சிகளையும் நாம் ஒப்புக்கொள்ளவில்லை தான் .ஆனால் குழந்தை  கண்ணனை யார் தான் ரசிக்கவில்லை?ஊத்துக்காடு வேங்கடகவி எப்படி அனுபவித்தார் என்று பார்ப்போம்
.



























பண்டைய காலத்தில்,ஏன் இப்பவும் இயற்கை படைப்புகளை தெய்வமாக வழிபடுவதை அறிவோம்.பூமி,நதிகள்,காற்று ,அக்னி,பறவைகள் பசு ,பாம்பு,குரங்குமுதலியவற்றை கூறலாம். ஏன் எலிக்கு கூட கோயில் உண்டு.பாகவதத்தில்,கண்ணன் கோவர்த்தன கிரி சம்பவத்தில்,மக்களை"இந்திரனுக்கு ஏன்  விழா எடுக்க வேண்டும்? மழைபெய்ய வைக்கவேண்டியது அவன் கடமை.மழைக்கு காரணம் மலைதான்.அதை கொண்டாடுங்கள் என்று உபதேசிக்கிறார்..பின் இந்திரன் கோபம் பின் விளைவுகள நாம் அறிந்ததே.

ஒரு டி .வி பே ட்டியில் ஆதிவாசிகள் வௌவாலுக்கு விழா எடுக்கிறார்கள் என அறிந்தேன்.காரணம்," அவைகள் தான் விதை களை பல இடங்களில் பரப்பி ,அதனால் காடுகள் பெருகி ,அதனால் மழை 


பெருகி வளம் பெறுகிறது.எனவே நன்றிக்கடனாக விழா எடுக்கிறோம்" இது மூட  நம்பிக்கையா? நம்மை விட அறிவாளிகள்.
மற்றொரு நிகழ்ச்சி.விவேகானந்தர் உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத மகாராஜா விற்கு உணர்த்த,அவருடைய உருவப்படத்தின் மேல் எச்சில் துப்ப சொல்லி, பணியாளரை அழைத்ததும் அவர் மறுத்ததும்,ராஜாவுக்கு உருவ வழிபாட்டின் தத்துவத்தை உணர்த்தியுதையும் நாம் அறிவோம்.

மற்றொரு கேள்வி. கடவுளுக்கு ஏன் இத்தனை உருவங்கள்,இத்தனை நாமங்கள். " நான் ஒருவன் தான் ஆனால்,தந்தைக்கு மகன்,பிள்ளைக்கு தந்தை,....சகோதரன் மாமன் மச்சான் மாணவன்,ரயில் நிலையத்தில் பிரயாணி,மருத்துவ மனையில் நோயாளி,சிறையில் கைதி,வங்கியில் வாடிக்கையாளர்,கோவிலில் பக்தன்................... வாயடைத்தவர் நம் பாலகிருஷ்ண சாஸ்திரிகள்.
சமீப காலத்தில் கூடதரிசனம் கண்டவர்கள்  தியாகராஜ சுவாமிகள்,வள்ளலார்..பின்னவருக்கு நடராஜ பெருமான் தரிசனம் தந்தார்.ஆனால் வள்ளலார் அழுது அரற்றினார்,பெருமான் காரணம் கேட்டதற்கு இந்த தரிச னம்  உலகில் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லையே என விடையளித்தார்.அவர் பாடல்கள் முழுவதும் ஆன்மீகத்தையு,ம் ,நன்னேரிகளை உணர்த்தவும் உலக நன்மைக்காகவும்,பகரப்பட்டவை.இறைவனிடம் என்ன வேண்டுகிறார். ஒரு பாடலை பார்ப்போம்.


அண்மையில் கண்ணன் தரிசனம் கண்டவர் அவிந்தர்.பதிவு செய்திருப்பவர் பாரதியார்.அவரே கண்டவர்தானே .அவர் கவிதைகளே அதற்கு  சான்று.

மனம் அது போன போக்கில் போகும்.


 Mumbai Venkataraman

No comments:

Post a Comment