Monday, November 25, 2013

Kavithai

என்னுள் உணர்வுகள் ஆயிரம் ஆயிரம் எனினும்
உன்னால் உள்ளேன் என்பது புரிந்தது கண்ணா
முன்னாள் ஏதோ யான் அறியேன் - அறியேன்
பின்னால் நடக்கும் நாடகம் எதேன்றும் - என்றும்
உன்னையே நம்பினேன் வாழ்கின்றேன் அய்யனே
என்னையே நம்பி வாழும் நாளும் வந்திடாதோ
பூவுலகம் உனக்கென்று படைத்தனயோ இறைவா
கூவும் குயிலும் இசை பாட உன் புகழை - மேலும்
பூத்து குலுங்கும் மலர் தோட்டம் அமைதனயோ
கொத்தாக மலர்களும் உனக்கென்று வைத்தனையோ
சொத்தாக உன்னை நான் பாவித்தேன் எனக்கென்ன
வைத்தனை நீ அறியேன் யான் எனினும் உன்னையே
நித்தமும் வாயார பாட வழி வகுப்பயோ இறைவா நீ!
கண்ணீர் மல்குதையா உன்னையே நினைக்கயிலே
தண்ணீரும் வேண்டேன் உன் தயைதான் இருக்கையிலே
உண்ணும் உணவும் வேண்டேன் என்றும் வேண்டி நின்றேன்
உன் திருவருளைத்தான் என்றுதான் தருவாயோ அதனை
பன்னீர் மணக்கும் சன்னிதியே உனதன்றோ பாவியேன்
என்னை  மறவாய் என் நாரணனே என்றுமே !
உலகம் படைத்தனை அதில்தான் 
பல உயிர்கள் கொடுத்தனை அதனையே 
சிலகாலம் வாழ்வதற்கே நீயே பணித்தனை 
நிலம்தான் அதில் வைத்தனை நீரும் 
கலந்தனை அதிலே நெருப்பும் இட்டனை 
நீல வானம் மேலே நிறுத்தினை 
சில்லென்ற காற்றினை வீசவிட்டாயே 
கொல்லென்று சிரித்தனயோ என்றுமே 
நில்லாத நாடகம்தனை நடத்தினயோ 
பொல்லாத மனித பொம்மைகள் செய்தனையோ 
கல்லாத மனம் ஒன்றை  கற்க விட்டனையோ 
சொல்லாத வார்த்தைகள் சொல்ல வைத்தனையோ 
எல்லாமே உனதென்றால் உனக்கென்ன பெருமை 
நில்லாமல் ஓடி வா பதில் கூற வா நீயே 
கல்லாக இல்லாமல் உயிர் பெற்று வா ஆண்டவனே !
உருகுகின்ற உள்ளமதில் உண்மையாய்குடிகொள்வாய்
மருகனென்ற பெயருக்கோ இலக்கணமாய் நீநின்றாய்
முருகா என அழைத்திட்டால் முன்னம் வந்துநிற்பாய்
அருகில் நீ இருக்க அடியேனுக்கு என்ன பயம்அய்யா !

திருத்தணி முருகா தித்திக்கும் முதல்வா நீயே
செருக்கழிக்கும் திருக்குமரனன்றோ நீ அபயம்
தருவாயே தருணத்தில் உன்னை நினைந்தால்
வருவாய் மயில் ஏறி மனத்தில் நீ நிறைவாயே

உருக்குலைந்து நான் போகும் முன்னே என்னுள்
அருமருந்தாய் வாராயோ துயரம்தனைதீராயோ
கருமுகில் கண்ணனின் மருகோனே கந்தாகடம்பா
திருவருள்தான் சுரப்பாயோ என் சுப்ரமண்யா
இனிய நண்பர்களே !
ஓசையிலிருந்து பிறந்ததுதான் இசை  எந்நாட்டவருக்கும் பொது உடமை இசை  பிரமத்திலிருந்து பிறந்தது நாத பிரம்மம்   சிவனுக்கு உகந்தது நந்தியின் தாளம் அந்த தாளத்தின் தாளமே இசைக்கு அடித்தளம்  உலகத்தில் எந்த மூலையிலும் இசை ஒலித்தாலும் அதன் அடித்தளம் அந்த நாதம் தான் அதிலே வேறுபாடே இல்லை  . இதற்க்கு அத்தாட்சியாக இத்துடன் அனுப்பியுள்ள ஒளி நாடாவின் ஒலியை எல்லோரும் பார்த்து அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் உண்மை - ஒலி ஒளி என்பது அந்த இறைவனுக்கு சொந்தமான பொருள் அதிலிருந்துதான் நாம் நம்முடைய சுயநலத்திற்காக எடுத்துக்கொண்டு அனுபவிக்கிறோம் என்பது துலங்கும் ! என்னைப்பொருத்தவரை எல்லோரும் இந்த உண்மையை அமோதிப்பீர்கள் என நம்புகிறேன் ! தங்கள் கருத்தை தயை கூர்ந்து எதுவாயினும் எழுதவும் !

இறையவனே இசைக்கு உரிமையாளன் !

ஸ்ரீதரன் ரிசர்வ் வங்கி



R.Sridharan
No Man is rich enough in this world to buy back his past!
HELP EVER
HURT NEVER



–Amazing precision drumming 
watch till the end!

 
 
                        http://vimeo.com/20408504





R.Sridharan
No Man is rich enough in this world to buy back his past!
HELP EVER
HURT NEVER

2 comments:

  1. இறையவனே இசைக்கு
    உரிமையாளன் --- உண்மை.

    ReplyDelete
  2. இறையவனே இசைக்கு
    உரிமையாளன் --- உண்மை.

    ReplyDelete