Thursday, March 1, 2012

இடைமருதுறான்(இண்டுஜூவல்) இல்ல புதுமனை புகு விழா கவிதை மலர்

--------------------------------------------
இடைமருதுறான்(இண்டுஜூவல்)   
இல்ல புதுமனை புகு விழா கவிதை மலர்
தைப்பூச  நன்னாளில்
புது மனை புகு விழா!-நம்
மனம் மகிழ் பெரு விழா!!
பாடல் பெற்ற இடைமருதாம் இதன்
பெருமை சொல்ல வார்த்தையில்லை!
எண்ணம் போல் அங்கு ஓரு  வீடு
ஏற்பட்டது இறை அருளோடு!
அன்பென்னும் வாசலிலே
அழகழகாய் காக கோலமிட்டு
அக்கறையாய் பூஜைகள்
அத்தனையும் நடந்தேறும்!!
மறையோர்கள் வாழ்த்தொலிக்க
மங்கலமே சூழ்ந்திருக்க
மனங்களுமே களித்திருக்க
மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க!!
பால் பொங்கி வழிந்திருக்க
பாச உறவுகள் துணையிருக்க
நடந்தது வைபவம்- நம்
அனைவருக்கும் இனிய அனுபவம்!!
இண்டுஜுவலுக்கும் ஒரு சுகானுபவம்
இன்பம் என்றும் தங்கட்டும்!
இறையருள் துணை இருக்கட்டும்!
இன்று போல் என்றும் வாழ
இறைவனிடம் வேண்டுகிறோம்!!!
 
ஸ்ரீதர்.

No comments:

Post a Comment