Thursday, March 1, 2012

இடவை இராமனின் கவிதை

நிம்மதிபெற முழுமதி பூசமுடன் கூடிய நாளில்
நம் அனைவரும் மனம் உடல் நலம் சிறக்க
மருதீசனை பூசனை செய்ய மனமது விழைய
மீண்டும் முத்துக்குமாருடன் சேர்ந்தே சென்றேன் மருதூருக்கு
 
துவாரகாபுரி வாசனின் தமயனுக்கருகில்
திக்விஜயம் செய்த விஜய்க்கு முன்னால்
எதிலும் நம்பர் ஒன் எனும் செல் ஒன் போலவே
எங்கள் எம்.எஸ். ஸின் இனிய இல்லம்! அன்னை இல்லம் !!
 
ஸ்ரீதரன் மகாலக்ஷ்மியுடன் வாசம் செய்யும் துவாரகாபுரியில்
ஸ்ரீதேவி மகிழும் மீரா பஜன்ஸ் மிகப்ரசித்தம் !
சிவா பார்வதிக்கு உவந்த ராம நாமமோ தினம் ஒலிக்கும்  !
மகாதேவன் அருளால் நலமும்  வளமும் நாளும் சிறக்கும் !!
 
தா  தா  என கேட்குமுன் அள்ளித்தரும் இறைவா !
தாத்தா என மணிகண்டன் தங்கை நவில வாய்ப்புத்தா சீக்கிரம் !
சிங்கநடை சிவா சித்தம் குளிர மணக்கோலம்  தா !
இங்கிதம் தெரிந்த எம் . எஸ். சங்கீத எம் எஸ் போல சேவை செய்ய அருள் தா !!
 
இடவை ராமு  BSNL

No comments:

Post a Comment