Sunday, September 22, 2013

Thoughts

இந்திய பொருளாதாரம் சீர் குலையும் நிலையில் உள்ள இந்த தருணத்தில் நாம் எல்லோரும் நம்புகின்ற அந்த ஆண்டவனைத்தான் கூக்குரல் எழுப்பி அழைத்து வந்து இந்த மகா பாரதத்தை திரும்பவும் அவனிடத்தில் ஒப்படைத்து காத்து அன்று இருந்த சுபிக்ஷதையும் அன்பான வாழ்க்கை நெறி முறையினையும் அன்று இருந்த வேத கோஷங்களையும் தர்ம நீதிகளையும் நிலை நாட்ட வேண்டி நிற்கவேணும். ஒரு புறம் மானிட அறிவுக்கு எட்டிய பொருளாதார நிபுணர்கள் கொண்டு வரும் சட்ட திட்டங்களினால் மட்டும் நிதி நிலைமை சீர் ஆகாது உண்மையை சொல்லப்போனால் நெறியான வாழ்க்கை உண்மையான அன்பு கள்ளம் கபடமில்லா நினைவுகள் ஏமாற்றாது வாழ்தல் பிறரின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு பிறர் படும் துக்கங்களையும் இன்னல்களையும் களைந்து இன்பமே நல்கும் உணர்வுகளுடன் இருத்தல் நல்ல நிலங்களை திருமகள் போல் காத்து அதில் உண்மையான விவசாயம் செய்து மக்களின் பசிப்பிணி போக்க பாடுபடுதல் என பல தர்ம முறைகளை பின்பற்றினாலே இயற்கை அன்னை நம்மை காத்திடுவாள் அன்பு வற்றி அடிவயிறு எரிந்து அதிலிருந்து உண்டாகும் வெப்பமே இன்று உலகமே எரிந்து பருவங்கள் மாறுகிறது பசி பரவுகிறது பட்டினி தலை விரித்து ஆடுகிறது பாவங்கள் வலுக்கிறது புண்ணிய கருமங்கள் நலிகிறது உலகத்திற்கே பஞ்சசீல கொள்கை பரப்பிய இந்த மண் இன்றும் பஞ்சத்தில் அடிபட்டுக்கொண்டு இருக்கிறது எங்கு காண்பினும் கொலை களவு களவும் கத்தும் மற   என்பதின் உண்மை விளக்கம் - களவு என்றால் திருட்டு - கத்து என்றால் - பொய் கூறுதல் - ஆக திருட்டையும் பொய் கூறுவதையும் விட்டுவிட்டு மற்ற நல் செய்கைகளில் நாட்டம் கட்டி தெரிந்து கொள் என்பதுதான் பொருள். எத்துனையோ மகான்கள் வாழ்ந்த இந்த பாரத பூமி ராமன் ஆண்ட பூமி என்றும் தருமத்தின் மடியில் வாழ எல்லாம் வல்ல இறைவனை நாம் பிரார்த்திப்போமாக !

ஸ்ரீதரன் ரிசர்வ் வங்கி


No comments:

Post a Comment