Sunday, September 22, 2013

PMD Jokes

தஞ்சாவூரில் மணிகூண்டு அருகே ஒரு கில்லாடி நின்று கொண்டு இருந்தான் .அப்போது ஒரு அப்பாவி  அவனருகில் சென்று " ஏம்பா இந்த கடியாரம் என்னவிலை ?" என்று கேட்க கில்லாடி" வாங்க சார்  உங்களுக்காக 5௦௦ ரூபாய்தான் வெளிலே யார் கிட்டேயும் இதைப்பத்   தி சொல்லாதீங்க சீக்கிரம் எடுங்க பணத்தை " என்றான்
அப்பாவி சுருக்கு பையை திறந்து எண்ணி மறுபடியும் எண்ணி "என்னை யாரும் ஏமாற்றமுடியாது  இந்தாங்க பணத்தை பிடிங்க "என்று சொல்லி குடுத்தான் .வாங்கின உடனே பையில் வைத்து கொண்டு நடையை கட்ட ஆரம்பிக்க  நம்ப ஆசாமி "நாந்தான் அப்பவே சொன்னேனே  என்னை யாரும் ஏமாற்ற முடியதூன்னு "
கில்லாடி "ஏம்பா அவசரப்படறே கடியாரம் கயட்ட ஏணி எடுத்துண்டு வாறேன்பா "
"சரி சரி சீக்கிரம் வா "  அவன் வருவானா திரும்பி  என அப்பாவி காத்திருந்து விட்டு வருத்தத்துடன் சென்றான்  

அப்பாவி என்ன செய்தான் அடுத்தவாரம் தொ ட ரு ம்  

===

சென்றவாரம்  அப்பாவி ஏமாந்தான்  இந்தவாரம்  என்ன செய்தான்  பார்க்கலாமா   அதே இடம் அதே நேரம் கில்லாடி அங்கே உலாவ நம் அப்பாவி அருகே சென்று "என்னப்பா நேற்று ஏணி  கொண்டு வரேன்  சொல்லி வரலியே என்னை ஏமாற்ற முடியாது " கில்லாடி சொன்னான் "ஏணி  கொண்டு வருவதற்குள்  நீங்க போய்விட்டீங்க  ஐயா "அப்பாவி"சரி சரி  அதான் சொன்னேனே  என்னை யாரும் ஏமாற்ற முடியாது  இந்தா பணத்தை புடி  எண்ணி பத்ரமா வச்சுக்க  நீ இங்கயே நில்லு நான் போய்  ஏணி  கொண்டு வரேன் " அப்பாவி அந்தபக்கம் போனான் கில்லாடி எதிர்புறம் வேகமாக  சந்தோஷமாக சென்றான் 
அப்பாவி ஏணியுடன்  வந்து பார்த்தான் "என்னை யாரும் ஏமாற்ற முடியாது "என்று சொல்லிக்கொண்டே வருத்தத்துடன்  போனான்  adutha vaaram  போலீசும்  திருடனும் தொடரும் 

PMD 

No comments:

Post a Comment