Thursday, October 27, 2011

தீபாவளி நல் வாழ்த்துக்கள்.....By இடைமருதூரான்.




An Emagazine by TDRities
--------------------------------------------
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.....
என் இனிய இடை மருதூர் வாழ் கனிகளே
சரித்திரம் படைக்கும் அரு மணிகளே 

இன்னலைச் சந்தித்து....இன்பமாய் ஏற்று
எதிர் நீச்சல் போட்டு....ஏற்றம் கண்டு
இன்று TOSA வும் கண்டு...TDR Times மூலம்
மீண்டும் முகம் காட்டும் முத்துக்களே 

அகம் எங்கு இருந்தாலும் சுகம் நமது TDR தான் என்று
சொந்தம் கொண்டாடும் மாணிக்கங்களே 

எத்தனை தினம் வந்தாலும் சங்கம தினம் தான்....
அத்துணை தினங்களிலும் மேல் என்றுரைக்கும் ரத்தினங்களே


மத்தாப்புச் சிரிப்பை முத்தாய்ப்பாய் வைத்திருக்கும்  முகவரிகளே
வானம் வாழ்த்த...வெடிகள் முழங்க,...சங்கமம் நான்கில்
நம் வீதிகளில் உலா வந்த மண்ணை மறவா மறவர்களே       
ஜோதியை ஏந்தி, உவகைக் களிப்பில் ஊர்வலம் வந்த காவலர்களே


கல்வி கொடுத்த பள்ளியை மறவாமல்   
கட்டி  அனைத்து
கவி பாடி, புவி சிறக்க,..பூரிப்படையும் கட்டித் தங்கங்களே   
அரிச்சுவடி படிப்பித்த ஆசிரியர்களையும் தேடிப்பிடித்து
கௌரவிக்கும் அரிய ஆற்றல்களே...பொக்கிஷங்களே
 
நகரத்தில் வாழ்ந்தது போதும் என்று, நகர்ந்து வந்து
இடைமருதூரிலியே....நகர் அமைத்து...
இல்லம் காணும் இன்பங்களே,.....இனியவர்களே
TOSA என்ற தீபத்திலிருந்து தோன்றிய ஒளிகளே   

புத்தாடை உடுத்தி.....பட்டாசும் வெடித்து
சர வெடி போல்....... வாரா வாரம் ...TDR Times ல்
சாகசம் புரியும், சாதகப் பறவைகளே
சங்கமச் சிந்து பாடும் சிங்கங்களே...   

ஜோதி மகாலிங்கத்திற்கு அடுத்த பெரிய ஜோதி
எங்கள் TOSA ஜோதி தான் என்று பாருக்கு பறை சாற்றி
மகாலிங்கத்தின் மடியில் தவழ்ந்த தீப ஒளிகளே
உங்கள் எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..
 
TOSA வின் அஸ்திவாரங்களான...அந்த ஆறு பேருக்கு
(விஜி, ராஜி, ரகுபதி, பாலகௌரி, ஸ்ரீதர், ராம்ஜி)
உள்ளத்தின் அடித் தளத்திளிருந்து...நன்றி கலந்த
தீபாவளி வாழ்த்துக்கள் .....வாழ்த்துக்கள்...

TOSA  வின் தோழர்களுக்கு சங்கம நாளும் ஒரு தீபாவளி நாள் தானே 
 
அன்றும் தான் புத்தாடை உடுத்தினோம் ...
அன்றும் தான் பட்டாசு வெடித்தோம்....
அன்றும் தான்  கோயிலுக்குப் போனோம்
அன்றும் தான் பெரியவர்களிடம் ஆசி வாங்கினோம்
அன்றும் தான் கூடினோம்....கும்மாளம் போட்டோம்....
அன்றும் தான்   குதூகலித்தொம் ......


ஆம்....நமக்கெல்லாம்......இரண்டு தீபாவளி
நாம் கொடுத்து வைத்தவர்கள்....
 
நமது தாரக மந்திரம்....
நமது ஊர்......நமது பள்ளி.....நமது கோயில்...
வாழ்க....வளர்க.....வளமுடன்.....     
உளம் கனிந்த தீபாவளி நல்  வாழ்துக்கள்


இடைமருதூரான்...........     tdr.msubramanian@gmail.com

Deepavali Nal Vazhthukal!

No comments:

Post a Comment