Saturday, October 12, 2013

Kavithai

கருவிலிருந்து உருவாகி மானிட உருவம்தனைகொடுத்து
பருவம் தந்து மாயம் என்ற உடை அணியவைத்து அதில்
கர்வமென்ற விதை விதைத்து ஆளாக்கிவாழ்வெனும் சுழலில்
தர்மமதை மறந்த நிலை தந்தனையோஆண்டவனே

நின்னை காண துடிக்கும் பல உள்ளங்கள்அய்யகோ
உன்னை அண்டி நிற்குதே எனினும் உன்உள்ளம்தான்
கனியவில்லை ஏனோ யான் அறியேன்அய்யனே
இணையில்லா மன்னனே என்னவனேகண்ணனே
பிணைத்திடுவாய் நின் அன்பெனும்பாசகயிற்றாலெ 

RBI Sridhar


No comments:

Post a Comment