Saturday, October 19, 2013

ஆண்டவனைத் தேடுகிறேன் ....வா .....வா ....வா



அன்பு உள்ள இதயத்திலே ஆண்டவன்   இருக்கின்றான் 

அகந்தை புகும் இடத்தில் இருந்து ஆண்டவன் நகர்கின்றான் 


ஆசை  உள்ள இதயத்திலே ஆண்டவன் இருக்கின்றான்

பேராசை புகும் இடத்தில் இருந்து ஆண்டவன் நகர்கின்றான்


இசை வடிவத்தில் ஆண்டவன் இருக்கின்றான்

இச்சை இதயங்களில் இருந்து  ஆண்டவன் நகர்கின்றான்


ஈகை உள்ள இதயங்களில் ஆண்டவன் இருக்கின்றான்

ஈகோ (Ego) புகும் இடத்தில் இருந்து ஆண்டவன் நகர்கின்றான்


உலகம் முழுவதும், அக உண்மையில்   ஆண்டவன் இருக்கின்றான்

உண்மையில்லா  உள்ளங்களில்  இருந்து ஆண்டவன் நகர்கின்றான்


ஊக்கம் உள்ள உள்ளங்களில் ஆண்டவன் இருக்கின்றான்
என்றும், எங்கும் நல்  எண்ணங்களில் ஆண்டவன் இருக்கின்றான்

ஏற்றம் கொண்ட சிந்தனையில் ஆண்டவன் இருக்கின்றான்

ஐய்ம்பொன் சிலை தனில் ஆண்டவன் இருக்கின்றான்

ஒற்றுமை தேடும் மனித நேயத்தில் ஆண்டவன் இருக்கின்றான்

ஓங்கார ரூபத்தில், ஒலியில்  ஆண்டவன் இருக்கின்றான்

கடின உழைப்பில், கதிரொளி வடிவில்  ஆண்டவன் இருக்கின்றான்

கடமை உணர்ச்சி தன்னில் ஆண்டவன் இருக்கின்றான்

சுய நலமில்லா....பொது நலத்தில் ஆண்டவன் இருக்கின்றான்  

தன்னலமில்லா சேவையில் ஆண்டவன் இருக்கின்றான் 

நன்றிக்கடன் நல்கிடும் நம் இதயங்களில் ஆண்டவன் இருக்கின்றான்

TOSA அன்பர்களின் உள்ளங்களில், எண்ணங்களில் ஆண்டவன் இருக்கின்றான்

அருவிக் கவிஞன் ஸ்ரீதர் கூறியது போல், வரி  அமைத்தது போல் 

ஆண்டவன் உன்னுள்   இருக்கின்றான்.............

ஆண்டவன் என்னுள் இருக்கின்றான்................

ஆண்டவன் நம்முள் இருக்கின்றான் ....................


 இடைமருதூரான் ...........     
திருவிடைமருதூர்    


No comments:

Post a Comment