Sunday, November 27, 2011

படைத்தான் ......படைத்தான்-By Hari

 
படைத்தான் ......படைத்தான்
 
காட்சி ஒன்றாக இருந்தும்,...கண்கள் இரண்டாக படைத்தான்
 
நல்லதோ அல்ல தீயதோ,....அதை உன்னிடத்தில் விடுத்தான்.

இதயம் ஒன்றாக இருந்தும்,... துடிப்பை இரண்டாக படைத்தான்,

வாழ்வதும்,... இல்லை வீழ்வதும் அதை உன் கையில் கொடுத்தான்.
சுவாசம் ஒன்றாக இருந்தும்,...வாசம் பலவாக படைத்தான்,

அதை நுகர்வதும்,.... விட்டு நகர்வதும் உன் முடிவுக்கே தான்,

நாள் ஒன்றாக இருந்தும்,....பகலாகவும் இரவாகவும் பிரித்தான்,

வெற்றி தோல்வியை,....உன் செய்கையின் பலனாகவே விட்டுவிட்டான்,

அன்பு ஒன்றாக இருப்பினும்,... உறவுகள் பலவாக வகுத்தான்,

பந்தத்தில் கரைவதும்,... விட்டு பிரிவதும் உன் எண்ணப் 
படியேதான்.

இறைவன் ஒன்றாக இருந்தும்,...மதங்கள் பலவாக கொடுத்தான்,

மறு ஜென்மம் எடுப்பதும் அவனுள் உறைவதும் உன் வினைகளின் பயன்களாக முடித்தான்.

அன்புடன் ஹரி....

No comments:

Post a Comment