Wednesday, December 21, 2011

என் பிரார்த்தனை

அலைகளின் மறைவில் கடலை காண்கிறாய் 
கடலின் எழுச்சியை ஏன் அலையை காண்கிறாய்,
உன்னுள் உணரமருக்கிறாய் கல்லாய் காண்கிறாய்
உன்னுள் உறைந்திருக்கிறான் அதை ஏற்றுகொள்ள மறுக்கிறாய்,
தீவினை காண்பவன் தீயதை எங்கும் உணர்வான்,
அவனிடம் வேண்டு 
இறைவா பெருமை சுயநலச் சுவர்களை உடைத்தெறி
பேர் புகழ் அதிகாரத்தின் மேல் உள்ள ஆசையை அழி,
சொல்லில் அடங்காத மகிழ்ச்சி தா,
விபரிக்கமுடியாத அமைதி தா,
எங்கும் நிறைந்த மனஅமைதி தா,
சாசுவதமான ஆனந்தம் தா.

அன்புடன் ஹரி

No comments:

Post a Comment