Saturday, December 24, 2011

அன்புடன் ஜெயலன்

அன்புடன் ஜெயலன் 

மனம் முழுவதும் மக்கள் அரங்கம் 

தித்திப்புடன் திரும்பினேன் 
தோசா விற்கு நன்றிகள் பலப்பல 

நம் மனதில் நம் ஊரைப் பற்றி  
ஊறி வரும் தகவல் வெள்ளத்திற்கு 
மக்கள் அரங்க மேடை 
கொள்ளளவில் 
ஆறு போல் ஆகவில்லைஎனினும்

உணர்ச்சி வெள்ளத்திற்கு 
வடிகாலாய் ஆனதினால் 
விசுவிற்கு நம்மின்
விசுவாச நன்றிகள் பலப்பல 

தைப்பூச தேரோட்டிகாட்டி 
ஊரையே     கூட்டியதும்  
தோசா - விசுக்கூட்டில்
உலகையே கட்டப்போவதும்              

தன்னைத்தான் அருச்சித்து 
பூஜிக்கும் தகைமை சொன்ன  
மாலிகுத்(மகாலிங்கசுவாமி) தெரியும் தன்    
திருவிளையாடலில் ஒன்றிதுவென்று 

அலகிலா விளையாட்டுடையான் 
அன்னவர்க்கே சரண் நாங்களே 

ஜெயலன் 

No comments:

Post a Comment