Saturday, November 5, 2011

பள்ளி முதல் பாடை வரை -Anbudan Aparna

சமாதானம் !! சமாதானம் !! சமாதானம் !!!!!

பள்ளி முதல் பாடை வரை 

நான் 
சமாதான இந்தியாவின் 
சாந்தமான பிரஜை 
அன்று 
அடுத்த வீட்டு 
ஆதித்தனுடன் அடி தடி - ஐந்து வயதில் ...

 நான்  
சமாதான இந்தியாவின் 
சாந்தமான பிரஜை !!!!

விடுமுறை வேண்டி வாத்தியுடன் வாதம் 
ஸ்ட்ரைக் எனும் பெயரில் -பதி நைந்து வயதில் !!

நான் 
சமாதான இந்தியாவின் 
சாந்தமான பிரஜை !!!!

வயதுக்கு வந்ததும் 
வஞ்சியை காதலித்து  
வர (வரும்) தட்சணை இழந்ததால் 
வருந்திய தந்தையுடன்  தகராறு  !!!

நான் 
சமாதான இந்தியாவின் 
சாந்தமான பிரஜை 

மணம் முடித்த சிலநாளில் 
மனைவியின் 
சின்ன சின்ன 
ஆசை பொறிகளை 
அடக்கும் சக்தி இன்மை 
அடிமனதில் நெருப்பூட்ட
துடித்தது ஆண் மனம் 
வெடித்தது எரிமலை 
விவாக ரத்து எனும் வார்த்தையாக ....

நான் 
சமாதான இந்தியாவின் 
சாந்தமான பிரஜை 

தள்ளாடும் வயதில் 
கல்லாகி போன 
கையாலாகா கடவுளை நினைத்து 
பொய்யாகிப்போன தன் 
போன நாள் நினைவு எண்ணி 
போகும் நாள் எதிர் நோக்கி 
காலனை காணாது
கடும் சினம் தாளாது 
தொடருகிறது சண்டயது 
தொநூறு வயதில் இன்று....

நான் 
சமாதான இந்தியாவின் 
சாந்தமான பிரஜை !!!!!!
uplifted hands 300x212 12 Home Manicure Tips for Busy Women

அன்புடன் அபர்ணா 

1 comment:

  1. idha padichuttu un mudhugula paaraatta thati kudukaren paar.. naandhaan unmayanasamadhana India win santhamaan prajai... vaazhthukkal aparna darling...

    ReplyDelete