Thursday, June 16, 2011

Kaveri Vantha Kathai - By Sridhar


See full size image

An eMagazine for TDRites
--------------------------------------------
---------- Forwarded message ----------
From: swami nathan <gsn1000@gmail.com>


காவிரி வந்த கவிதை
இறையனாருக்கும் உமையவளுக்கும் திருமணமாம் கயிலையிலே
இதனைகான குவிந்தனர்  முனிகள் கூட்டம் கயிலையிலே
புவிப்பாரம்  தாங்காமல் தாழ்ந்ததாம் வடக்கு உயர்ந்தாம் தெற்கு
இது கண்டு வியப்புற்று  உமையவள்தாம் ஈசனிடம் முறையிடவே 

வந்த முனிதனில்  குள்ளமான  கும்பமுனியினையழைத்த 
ஈசன்  கும்ப முனியே அனைவரும் வந்ததனால்  தாழ்ந்ததாம் 
வடக்கு உயர்ந்ததாம்  தெற்கு,  மேருவிற்கு போட்டியாக வளர்கிறதாம் 
விந்தியமும் எனநீ  தென்திசை நோக்கி செல்லென  ஈசனவன் ஆணையிட
 
வருந்திய அகத்தியனை வாவென்றனவழைத்து தமிழ்
செவ்விலக்கலக்கணதன்னை காதில் ஓதி  அதனுடன் கையிலொரு 
கமண்டலமும் தந்து  தென்திசை சென்று தீயனை அழித்து 
எம்மணத்தினை நீ இடைமருதிலே  காணென்ருரைத்தான்

சிவ தொண்டு, தமிழ் தொண்டு, உடற்தொண்டு என சாத்திரம்பல
படைத்து அழியா புகழ் பெறுவாய்  என ஆசி பல நன்கூறி அனுப்ப
 தென்னோக்கி புறப்பட்ட அகத்தியமுனி விந்தியத்தை என்னைவிட
குறைவாக எழ என வேண்ட வழிவிட்டதாம் விந்தியமும்

விதர்ப்ப மன்னன் வேண்டி வந்த சிசுவரமளித்த பின்னர்  
அந்லோபமுத்திரையுடன் மணமுடித்த கும்பமுனி
 விந்தியம் தாண்டி பஞ்ச கௌட பஞ்ச திராவிட என
பிராந்தியங்களை பத்தாய் பிரிக்க பத்து மொழி உருவானதாம் தென்னகத்தே

தான் கொணர்ந்த தமிழ் மொழிக்கி தென் பொதிகை மலைதனிலே
தனியிலக்கணம் உருவாக்க தவமிருந்த முனியினிடம்
தஞ்சமானன்   சோழ மன்னன் மருதராஜன்

உனக்கென்ன வரம் வேண்டும் என கேட்ட முனியினிடம் 
வந்த மன்னன் முனியினிடம் எனது நாடு வளமாக நீர் வேண்டும் எனகூற  
ஈதென்ன மாமன்னா இதில் கூட பொது நலமா என கேட்க
எனது நாட்டு மக்கட்கு ஈதென்ரி    வேறேது என மன்னன் கைகூப்பி நின்றபோது

வந்தது காக்கை உருண்டது கமண்டலம் திரண்டது காவேரி
 தனது நாடு வரவெண்ணி சோழ மன்னன் கைகூப்ப
தைபூச தினத்தென்று  காவிரியில் நீராட இடைமருது
வருவேன்னென மகிழ்ந்துரைத்த கும்பமுனி
 
சொன்னபடி தைப்பூச திங்கள்தனில் மன்னனுடன் இடவையிலே
காவிரியில் நீராடி மருதனையே வணங்கினானே வந்தமுனி
இடவையிலே இறையன்மண கோலம்தன்னை 
கண்டபின்னர் மகிழ்ந்தானே
 
ஸ்ரீதர்

No comments:

Post a Comment