Thursday, June 16, 2011

Idavai Raman


See full size image

An eMagazine for TDRites
--------------------------------------------

---------- Forwarded message ----------
From: Narayan Ramaswamy <nrs1_rttc@yahoo.com>



பூஞ்சோலை சூழ் வளர் தஞ்சை மத்தியில்
காவிரி பாயுறை சீர்மிகு மருதூர்தனில்
இடைமருதீசன் உடனுறை சுந்தரி அருளால்
மடைதிறந்த வெள்ளமென இங்கு மாணாக்கர்காள்!  

தாயின் மடியில் தவழும் சேயாகி பின்
பாலகனாய் பயின்ற பொழுதில் அகக்கண் திறந்த
ஆசான் ஆசிகள் வேண்டி நீவிர் இங்கு
ஆசான் அனைவரையும் கூட்டி மகிழ்கின்றீர்

பள்ளி முடித்து நீவிர் விரும்பின பெற்றுய்ய
காலத்தை திட்டமிட்டு செவ்வனே செயல்பட்டு
கவின்மிகுகலைகள் பல்கலையில் கற்றுணர்ந்து
நவினுறு வாழ்வில் நயம்பட உரைக்கும் ஆற்றல்பெற்று
இணைந்து செயல்பட்டு எதிலும் வெற்றி கண்டீர்! 

தோல்வியை கண்டு துவளா நெஞ்சம் பெற்று
மாற்று வழியில் முயன்று வெற்றி பெற்ற நீவிர்-வாழ்வில்
கற்ற இவ்வடிப்படை விஷயமே விளையாட்டிலன்றோ?-அதனை
இன்றைய மாணவர்க்கு உணர்த்தவே இங்கு இவ்விளையாட்டோ?

ஆண்டுகள் பல ஆனாலும் நம் மனதில் பள்ளியில்
வாண்டுகளாய் கூடி விளையாடிய பொழுதில்  தலையில்
குட்டு வைத்து திருத்திய ஆசான்முன் பணிவுடன் - மனதில்
பட்ட சொற்கோவையிதனை  குருபதமலராய் சூட்டுகிறோம்!

ஆசான் அவர்தம் சுற்றமும் நட்பும் மன-உடல் நலம் சிறக்க பெற்று
மன்பதையில் பல்லாண்டு வாழ்ந்து பலரையும் வாழ்விக்க
இடைமருதூர்உறை உமையொருபாகன் அருளட்டும்!
இமைபொழுதும் நீங்காதான் நமையெலாம் காக்கட்டும்!

நாடாளும் வேந்தர் முதல் - ஒபாமா முதல்
காடாளும் அரசன் வரை - ஒசாமா வரை
அனைவரும் நலமே பெருக!வளமுடன் வாழ்க!!- அனைவர்தம்
சிந்தையுள் அன்பே கடவுள் என ஒளிரச்செய்வோம்!!
வாழ்க TOSA !   வளர்க TOSA !!  காத்தருள்  மருதீசா!!!
 

                                                                         - நா.ராமசுவாமி
                                                                            9445008033.

No comments:

Post a Comment