Sunday, January 22, 2012

கால வெள்ளத்தில் கரைந்து போன கலைஞர்கள்

சொல்வனம்

.: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.



(திருவிடைமருதூரில் வாழ்ந்து இறந்தவர்களின் பெருமைகளை பேசி பறை சாற்றும் நாம், ஜீவனதிர்க்கே கஷ்டப்படும் இந்த கலைஞர்களுக்கு என்ன செய்ய போகிறோம் ? -உங்கள் கருத்து என்ன ? -TDR Times) 
 
 
சார்!
நாங்கள் அவர் வீட்டுக் கதவைத் தட்டினோம். உள்ளே ஒரு அனக்கம் இல்லை.
சார்!
மறுபடியும் கூப்பிட்டோம்.
பதில் இல்லை.
முன் கதவை இலேசாகத் தள்ளி உள்ளே உற்றுப் பார்த்தோம்.
ஒரு கிழிந்த பாயில், கிழித்துப் போடப்பட்ட பாயாக ஒரு பெண் படுத்திருந்தாள். அவர் பக்கத்தில் ஒரு மண் சட்டியில் இருந்து புகை எழுந்து கொண்டிருந்தது. கொசுவை விரட்டுவதற்காக எதையோ எரிய விட்டிருக்கிறார்கள். அந்தப் பெண் தலையை இலேசாகத் தூக்கினாள். அதற்கு மேல் தூக்கமுடியவில்லை. மீண்டும் படுத்துக் கொண்டாள். மனமும் உடலும் சரியில்லாத நோயாளி என்பது முதல் பார்வையிலேயே தெரிந்து விட்டது.
உடன் வந்த நண்பர்கள், நாகசுரம் இஞ்சிக்குடி சுப்பிரமணியமும், புகைப்பட கலைஞர் ஸ்ரீநாத்தும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினார்கள்.
“தவறுதலாக தீச்சட்டி அந்தப் பெண் மேலே விழுந்து விடப் போகிறது. யாரையாவது கூப்பிடலாம்” என்றார்கள்.
எங்கள் சத்தத்தைத் கேட்டு வீட்டின் பின்புறம் இருந்து ஒரு பெண்ணும் அவருடைய கணவரும் வந்தார்கள்,
உள்ளே பெரியவர் இருக்கிறாரா என்று கேட்டோம். அவர்கள் உள்ளே போய் ஒரு வயதான மனிதரை அழைத்து வந்தார்கள். ஊதினால் பறந்து விடுவார் என்பது போன்ற தோற்றம். ஒன்றுக்கு இரண்டாக சட்டை அணிந்திருந்தார். துவைத்து பல நாட்கள் இருக்கும். காது கேட்காது என்பதற்கு அடையாளமாக காது கேட்கும் கருவி அணிந்திருந்தார்.
[ராமச்சந்திர ராவ்]
“உங்களுக்கு கோட்டுவாத்தியம் சகாராமராவைத் தெரியுமா?” என்று ஊருக்கேக் கேட்குமாறு கத்திக் கேட்டேன்,
சட்டென முகத்தில் புன்னகை மலர்ந்தது. கூடவே எங்கிருந்தோ பலமும் அவர் உடலில் சேர்ந்து கொண்டது போல் நிமிர்ந்து நின்றார்.
“அவர் என்னோட பெரிய தகப்பனார். நான் அவரோட தம்பி ஹரிராவ் புள்ள.”
எண்பத்தைந்து ஆண்டுகளில் முதல் முறையாக தன்னுடைய குடும்பத்தினரின் இசைப் பங்களிப்பைத் தெரிந்து கொண்டு யாரோ வந்திருப்பதில் அவருக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி.
photo-3
[சித்ரவீணையுடன் சகாராமராவ்]
மறைந்த செம்மங்குடி சீனிவாசய்யரின் குருவான சகாராமராவ் திருவிடைமருதூர்க்காரர். செம்மங்குடியின் பேச்சில் எப்போதுமே சகாராமராவைப் பற்றி ஒரு செய்தி இருக்கும். அந்த சகாராமராவ் வாழ்ந்த திருவிடைமருதூரையும், அவர் குடும்பத்தினரையும் பார்த்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில்தான் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். ஆனால் அவர்களைத் தேடிப்பிடிப்பது அத்தனை எளிதாக இல்லை.
மன்னார்குடிக்கு மதில் அழகு, திருவாருர் தேர் அழகு என்றால், திருவிடைமருதூருக்கு தெரு அழகு. இன்றும் அந்த அகண்ட தெருக்கள் அழகு குறையாமல்தான் இருக்கின்றன. மாராட்டியர் காலத்து அரண்மனை ஒன்று சிதிலமடைந்து, செடிகளும் மரங்களும் முளைத்துக் கிடக்கிறது. நெருங்கி பார்த்தால், அதன் பேரழகு புலப்படுகிறது. கால வெள்ளம் அதை அடித்து ஒரமாய்ப் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறது.
ஒரு காலத்தில் மகாலிங்கசுவாமி கோவில் விழாக்களின்போது அந்தத் தெருக்களில் இசை எதிரொலித்துக் கொண்டே இருந்தது. கொட்டும் பனியில், தலையில் மப்ளரைப் போட்டுக் கொண்டு விடிய விடிய நாகசுர கச்சேரிகளைக் கேட்ட ஆனந்தத்தை செம்மங்குடி விவரிக்கும்போது, நாமும் அங்கே நின்று அதை கேட்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.
“அவாளையெல்லாம் கேட்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்,” என்று செம்மங்குடி கூறுவார்.
இன்று அந்த தெருக்களில் ஒரு வெறுமை மட்டுமே நம்மை சூழ்ந்து கொள்கிறது. அந்தத் தெருக்களில் நின்று வருவோர் போவோரிடம் எல்லாம் சகாராமராவைத் தெரியுமா, சகாராமராவைத் தெரியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தோம். 1900-களின் தொடக்கத்தில் கர்நாடக இசை உலகில் கோலோச்சியவர்களில் சகாராமராவும் ஒருவர். 1930-களில் காலமாகி விட்ட அந்த கோட்டுவாத்தியக் கலைஞரை இன்று அவர் ஊரில் யாருக்கும் தெரியவில்லை.
மராட்டிய மன்னர்கள் தஞ்சையை ஆண்டபோது அங்கு பல இசைக்கலைஞர்கள் குடிபெயர்ந்தனர். அவர்களில் சகாராமராவின் குடும்பமும் ஒன்று. வீணை போல் இருக்கும் கோட்டுவாத்தியத்தை அவர் வாசித்து வந்தார். “பண்டைகாலத்தில் அதன் பெயர் சித்ரவீணை என்றுதான் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் சகாராமராவ் அதை கோட்டு வாத்தியம் என்று அழைத்தார்,” என்கிறார் சித்ரவீணை கலைஞர் ரவிகிரண்.
அந்த வாத்தியத்தில் பல மாற்றங்களை செய்து வாசித்து வருகிறார் ரவிகிரண். அவருடைய தாத்தா நாராயண ஐயங்கார் சகாராமராவின் முக்கியமான சீடர். அந்த வாத்தியம் இத்தனை பிரபலம் அடைந்ததற்குக் காரணம் நாராயண ஐயங்கார்தான். ஒரு கையால் மீட்டிக் கொண்டு, மற்றொரு கையில் வைத்திருக்கும் சிறு கட்டையால் தந்திகளை அழுத்தி வாசிப்பார்கள். எருமைக் கொம்பால் இந்த கட்டை செய்யப்பட்டிருந்தது. இப்போது டெப்லான் என்று அழைக்கப்படும் சிந்தடிக் கட்டையைப் பயன்படுத்துகிறார்கள்.
சகாராமராவின் குடும்பத்தினர் குறித்தத் தகவலை மற்றவர்களால் தரமுடியாத நிலையில், அந்த ஊருக்கு இசையுலகில் பெரும்பெயரை வாங்கித் தந்த நாகசுரம் வீருசாமி பிள்ளைக்குத் தாளம் போட்ட சி. கணேசனை அணுகினோம். வீருசாமி பிள்ளைக்கு 22 ஆண்டுகள் அவர் தாளம் போட்டிருக்கிறார். மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி பட்டம் பெற்ற மூன்று நாகசுர கலைஞர்களில் வீருசாமிபிள்ளையும் ஒருவர்.
கணேசன் வீட்டுக்குப் போய் விசாரித்தபோது, அந்த ஊரில் வயலின் வாசிக்கும் ஒரு வயதான பெரியவரைக் கேட்டால் சகாராமராவைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது என்றார். சொல்லப்போனால் கணேசனே சகாராமராவைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. நமக்காக தனக்கு வேண்டிய ஒருவரை விட்டு, மகாதான தெருவில் வசித்து வந்த அந்த வயதான வயலின் வித்வான் குறித்து அறிந்து வருமாறு அனுப்பினார். தேடிப் போனவர் சற்று நேரத்தில் திரும்பி வந்தார். அந்தப் பெரியவர் வீட்டை விற்று விட்டு வேறு எங்கோ போய் விட்டதாகக் கூறினார்.
“இங்கே இப்போ யாரும் இல்லை தம்பி. கோயிலில் நாகசுரம் வாசிக்க இரண்டு பேர் இருக்காங்க. மற்றபடி சங்கீகத்தைத் தேடிப் போனாலும் கேட்க முடியாது. ஒரு காலத்திலே இந்த ஊருல வந்து பாடாதவங்க யாரு இருந்தாங்க, நாகசுரம் வாசிக்காதவங்க யாரு இருந்தாங்க,” என்று பழைய நினைவுகளில் மூழ்கினார் கணேசன்.
குடும்ப வறுமையின் காரணமாக தன்னுடைய ஒன்பதாவது வயதில் வீருசாமி பிள்ளையிடம் தாளம் போடுவதற்காக வந்து சேர்ந்தார் கணேசன். அன்றிலிருந்து 22 ஆண்டுகள் அவரோடே இருந்தார். 13 வயதில் வீருசாமி பிள்ளையுடன் இலங்கை செல்வதற்காக அவர் பெற்ற பாஸ்போர்ட்டை எடுத்து நமக்காகக் காட்டினார்.
“நான் போகாத ஊர் இல்லை. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன். ஒரு மாதம் இரண்டு மாதம் தொடர்ந்து கச்சேரி இருக்கும். வீட்டுக்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறைதான் வருவோம். ஒரு தலைமுறைக்கு ஒரு தாளம் (ஜால்ரா) போதுமானது. ஆனால் நான் ஏழு தாளங்களை உடைத்திருக்கிறேன். அப்படினா எவ்வளவு கச்சேரி இருந்திருக்குமுண்ணு யூகிச்சுக்குங்க,” என்று கூறிக் கொண்டே தன் வீட்டு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த வீருசாமி பிள்ளையின் படத்தை உற்றுப் பார்த்தார் கணேசன்.
கண்ணாடி உடைந்து, சிலந்தி வலை சூழ இருந்த புகைப்படத்தில் கையில் பாரி நாயனத்துடன் கம்பீரமாக நம்மைப் பார்க்கிறார் வீருசாமி பிள்ளை.
“அவர் கணக்கில்லாம சம்பாதிச்சாரு. இந்த ஊருல எட்டுக்கட்டு வீடு அவர் வைத்திருந்தார். ஆனால் அவர் காலத்துக்குப் பிறகு பல கை மாறி விட்டது. கடைசியில் வீட்டை வாங்கியவர்கள் அதை டாஸ்மாக் சாராயக்கடை நடத்துவதற்கு வாடகைக்கு விட்ட போதுதான் என் மனம் உடைஞ்சு போச்சுங்க,” என்று கூறிக் கொண்டே தன்னுடைய இடதுகை பெருவிரலால் படத்தில் இருந்த சிலந்தி வலையைத் துடைத்தார்.
photo-12
[வீருசாமி பிள்ளையின் படத்துடன் கணேசன்]
கணேசனுக்கு இடதுகையில் பெருவிரல் மட்டும்தான் இருக்கிறது.
“இந்த ஊரில் ஒரு நாயுடு ரைஸ் மில் வைத்திருந்தார். அரையணாவுக்கு நெல் அரைத்துத் தருவார். கூலி அதிகமாக இருக்கிறது என்று எல்லோரும் வீருசாமி பிள்ளையிடம் கூறினார்கள். நாயுடு அவருக்கு நண்பர். காலணாவுக்கு அரைத்துத் தருமாறு நாயுடுவிடம் கேட்டுக் கொண்டார். நீரு ஒரு மில் வைச்சு காலணாவுக்கு அரைத்துக் கொடும் என்றார் நாயுடு. உடனே மில் வைத்து விட்டார் வீருசாமி பிள்ளை,” என்று பழைய கதையை நினைவுகூர்ந்தார்.
அந்த மில்லின் எந்திரத்தில் கை மாட்டிக் கொண்டுதான் கணேசனின் நான்கு விரல்களும் துண்டாகி விட்டன. தற்போது அந்த ஒரு விரலால் தவில் வாசித்து, வாழ்க்கையை ஓட்டி வருகிறார் கணேசன்.
கணேசனிடம் விடைபெற்றுக் கொண்டுதான் சகாராமராவின் குடும்பத்தைத் தேடி அலைந்தோம். யாருக்கும் தெரியவில்லை. நமக்காக ஒருவர் திருச்சியில் இருக்கும் தன்னுடைய அக்காவை தொலைபேசியில் அழைத்து விவரம் கேட்டார். அவருடைய அக்கா திருவையாறு இசைக் கல்லூரி தொடங்கிய போது பயின்ற முதல் மாணவியரில் ஒருவர். அவருக்கு சகாராமராவைத் தெரிந்திருக்கலாம் என்று அவர் விசாரித்தார். அவருக்கும் தெரியவில்லை. திருக்கோடிகாவலுக்குப் போய் விசாரிக்கலாம் என்று புறப்பட்டபோதுதான், திருவிடைமருதூரில் உள்ள பன்னிரண்டு அக்கிரஹாரத்திலும் விசாரித்தோம். அங்கும் இல்லை. கடைசியாக தெற்கு எடத் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கும் ராமச்சந்திரராவைக் கண்டுபிடித்து விசாரிக்கத் தொடங்கினோம்.
“எங்க அப்பா வயலின் வாசிப்பார். நானும் வயலின் வாசிப்பேன்,” என்று கூறி விட்டு, சட்டென வீட்டுக்குள் புகுந்து ஒரு புகைப்படத்துடன் வந்தார் ராமச்சந்திரராவ்.
photo-7
“இந்த படத்தில் கோட்டுவாத்தியத்துடன் இருப்பது சகாராமராவின் புள்ள சீனிவாசராவ். கூட வயலினை வைத்துக் கொண்டிருப்பவர் என் தகப்பனார்,” என்றார் அவர். [மேலே உள்ள படம்].
“நான் முதலில் திருவாலங்காடு சுந்தரேச ஐயரிடம் வயலின் கற்றுக் கொண்டேன். பின்னர் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் பாடம் தொடர்ந்தது,” என்று கூறிக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் புகுந்தார்.
photo-4
இப்போது கையில் இன்னொரு புகைப்படம். அதில் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையுடன் இவர் இரண்டாவது வயலின் வாசித்துக் கொண்டிருக்கும் புகைப்படம். அந்தப் படத்திலேயே ராமச்சந்திரராவின் தகப்பனார் ஹரிராவ், ருத்திராட்சம் அணிந்து, உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, உச்சிக்குடுமியுடன் முன் வரிசையில் உட்கார்ந்து கச்சேரிக் கேட்டுக் கொண்டிருக்கிறார். [மேலே உள்ள படம்].
“மகாலிங்க சாமி கோயில் உற்சவத்தில் ஏராளமா கச்சேரி கேட்டிருக்கிறேன். ஆறு நாகசுரம், 12 தவில் சேர்ந்து மல்லாரி வாசிப்பார்கள். அப்படியே காது நிறைந்து விடும். திருவாவடுதுறை இராஜரத்தினம் கேட்டிருக்கிறேன். அவர் மாதிரி யாரும் வாசிக்க முடியாது. வேதாரண்யம் வேதமூர்த்தி கேட்டிருக்கீங்களா? அற்புதமா இருக்கும். நானே நாகசுரத்துக்கு வயலின் வாசிச்சிருக்கேன்,” என்று பேசிக் கொண்டே மகிழ்ச்சியில் திளைத்தார் இராமச்சந்திரராவ்.
“உங்களுக்கு கோட்டுவாத்தியம் நாராயண ஐயங்காரைத் தெரியுமா?”
“நானும் அவரும் டைரக்டர் சுப்பிரமணியதின் ஸ்டுடியோவில் ஒன்றாக வேலை பார்த்திருக்கிறோம்,” என்றார் ராமச்சந்திரராவ். அவர் தொடக்கத்தில் படித்தது எல்லாம் மயிலாப்பூர் பி.எஸ். பள்ளியில்தான்.
“சகாராமராவுக்கு பெரிய மீசை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மையா?” என்றோம்.
“ஆமா ஆமா. அவர் என்னை தூக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது அவருடைய மீசையைப் பிடித்து இழுப்பேனாம். டேய் ஹரி இவன் மீசையைப் பிடிச்சு இழுக்கிறாண்டா என்று இறக்கி விட்டு விடுவாராம்,” சிரித்துக் கொண்டே சொன்னார்.
“உங்கக்கிட்ட ஏதாவது சகாராமராவ் படம் இருக்கா?”
“நிறைய படம் இருக்கு சார். எனக்கு உடம்பு முடியல. எல்லாம் மூட்டை கட்டிப் போட்டிருக்கிறேன்” என்றார்.
பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மீண்டும் வீட்டுக்குள் புகுந்து ஒரு புகைப்படத்துடன் வந்தார். ஆனால் அதற்கு சட்டமோ, கண்ணாடியோ இல்லை.
photo-2
அப்படத்தில் நடுநாயகமாக மதுரை புஷ்பவனம் உட்கார்ந்திருக்கிறார். ஒரு பக்கத்தில் பீட்டில்ஸ் ஹாரிசன் போல் தலைமுடியை வளர்த்துக் கொண்டு, அடர்ந்த மீசையுடன் கோட்டுவாத்தியத்துடன் இருக்கிறார் சகாராமராவ். மிருதங்கம் கும்பகோணம் அழகியநம்பியா பிள்ளை ஒரு பக்கமும், திருக்கோடிக்காவல் வயலின் வித்வான் இராமசாமி ஐயர் இன்னொரு பக்கமும் இருக்கிறார்கள். [மேலே உள்ள படம்].
“மத்தவா பேரு எனக்கு ஞாபகத்துக்கு வரலை. எனக்கு காது கேட்க மாட்டேங்குது. வயலின் வாசிக்கறதை நிறுத்தியாச்சு. பொண்ணுக்கு உடம்பு சரியில்லை. அவளை நான்தான் பார்த்துக்கிறேன். மகாதான தெருவில் இருந்த வீட்டை வித்தாச்சு. பணத்தை பாங்கிலே போட்டு, வட்டியை வாங்கி, மூணு வேளையும் கடையில வாங்கி சாப்பிட்டுட்டு காலத்தை ஒட்டுறேன்,” என்றார்.
சற்று நிறுத்தி விட்டு, வீட்டின் உள்ளே உற்றுப்பார்த்தார்.
“எம் பொண்ணும் நல்லா வயலின் வாசிப்பா சார்”
மறுபடியும் வீட்டுக்கு உள்ளே போனார். இப்போது ஒரு வண்ணப்புகைப்படம் அவர் கையில். ராமச்சந்திரராவும் அவருடைய பொண்ணும் சேர்ந்து வயலின் வாசிக்கும் படம். படத்தை உற்றுப்பார்த்து விட்டு, வீட்டுக்கு உள்ள பாயில் கிடக்கும் மகளையும் உற்றுப் பார்த்தார். ஒரு மாபெரும் சோகம் நம்மைக் கவ்விக் கொண்டது.
“உங்க சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களா”
“எல்லோரும் போய் சேர்ந்தாச்சு. எல்லோருக்குமா சேர்த்து இப்ப வருசத்துக்கு 10 திவசம் கொடுக்கிறேன்”

Sunday, January 15, 2012

கோவிந்தபுரம் கொண்டையா

என்ன இது .......................வித்தியாசமான   ஒரு பெயர்.
 
இது வரை கேள்விபடாத ஒரு பெயரும் கூட .
 
ஆம் வித்தியாசமான   பெயர்தான்......................  
 
அதுமட்டுமல்ல இந்த கட்டுரையில் வரும் ஒரு தகவலும் நாம் இது வரையில் அறியபடாத ஒரு பெரிய தகவல்தான்.  
 
இந்த தகவல் All India Radio வில் கடந்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஐந்து நிமிடங்கள் சொல்லப்படும் செய்தியிலிருந்து திரட்டியது.  இந்த தகவல்களை    சிவகாசியில் அச்சு தொழில் (குறிப்பாக காலெண்டர்)  என்னும் ஒரு தலைப்பில் சென்னை ரேடியோ ஒலி பரப்பியது. தொடர்ந்து இந்த செய்திகளை கேட்ட உடன் எனக்கு மனதில் தோன்றியது இதுதான்.
 
எப்படி நமது மகாலிங்க பெருமான் ஒரு சாதாரண மனிதனை நமது ஊரில் பிறக்க வைத்து பின்னர் அவரை எப்படியெல்லாம் ஒரு மாமனிதராக மாற்றி விட்டார் என்று.
 
இதனால் அல்லவா நம் ஊர் மகாலிங்கத்தை பார்த்தவுடன் மாணிக்கவாசகர்
 
கடவுளே அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்து  அதில்  நான் ஒரு புழுவாய் பிறந்தாலும் கூட உனது காலடியில்தான் பிறக்க வேண்டும் என்று பாடினார்.
நமது ஊர் அப்படி பட்ட ஊர் நமது மகாலிங்கமும் அப்பேர் பட்டவர். 
 
சரி கட்டுரைக்கு வருவோம்.  
 
சென்னை ஐ ஐ டி யில் அப்போது வேலை பார்த்த  டாக்டர் ராஜு என்னும் ஒரு பேராசிரியர் திருவண்ணாமலையில் ரமணரை தரிசனம் செய்து தனக்கு ஏற்பட்ட சில ஆன்மீக  ஐயப்பாடுகளை விளக்கம் பெற்று கொள்ளுவதற்கு பகவான் ரமணரிடம் பேசி கொண்டு இருந்தாராம்.
 
 பேச்சினுடே அவர்  சிலர் ராம ராம என்று எழுதி அதையே பூஜை செய்கிறார்கள். நான் சிறு வயது முதலே சிவனிடம் பற்று கொண்டு சிவனையே கடவுளாக வழிபடுபவன். எனவே நான் சிவனை படமாக வரைந்து அதையே நான் வழிபடலாமா என்று கேட்கிறார். அதற்கு ஸ்ரீ ரமணர் தாராளமாக செய்யலாம் என்று பதில் தருகிறார்.
 
உடனே அந்த ஐ ஐ டி பேராசிரியர் ஒரு காகிதத்தில் வரைந்து இது சரியாக உள்ளதா சுவாமி என கேட்க ஸ்ரீ ரமணர் அதனை பார்த்துவிட்டு இது சற்று சரியாக இல்லையே என்று சொல்லிவிட்டு நீ  நல்ல முறையில் தியானம் செய்துவிட்டு வரைய ஆரம்பி சரியாக வந்து விடும் என்று சொல்கிறார். 
 
பேராசிரியர் பல முறை அங்கேயே முயற்சித்து வரைந்து  காட்டியும்  ஸ்ரீ ரமணர் சரி என்று சொல்லவில்லை. இந்த சம்பாஷணைகளை பார்த்து கொண்டிருந்த மனிதர்களில் ஒருவர் ஸ்ரீ ரமணர் முன்பு வந்து............... சாமி......... நான் வரைந்து தரட்டுமா என கேட்க  அதற்கு ஸ்ரீ ரமணர் சரி அவர் ஒத்துகொண்டால் வரைந்து கொடு என்று பதில் சொல்ல உடனே பேராசிரியர் தன்னிடம் இருந்த
பேப்பரை அவரிடம் கொடுக்க அவர் சில நிமிடங்களில் சிவனை வரைந்து அதனை ஸ்ரீ ரமணரிடம் காட்டினார். படத்தினை பார்த்த உடன் மிகவும் பரவசம் அடைந்த ஸ்ரீ ரமணர் அப்பா இவர் சாட்சாத் மகாலிங்கம் அல்லவா பிரித்ட்ஷமாக உள்ளாரே அப்பா ஜோதிமஹாலிங்கா  என்று கூறி அந்த படத்தினை ஒரு கல்லின் மீது வைத்து மூன்று முறை வலம் வந்து அப்படியே அதன் முன்னர் நமஸ்கரித்து விட்டாராம் ஸ்ரீ ரமணர். சுற்றி இருந்த கூட்டத்தினர்  அனைவரும் வாயடைத்து நின்றனராம்.
 
சற்று நேரம் கழித்து ஸ்ரீரமணர் அந்த மனிதரை கிட்டே அழைத்து அப்பா நீ யாரப்பா உனக்கு ஸ்ரீ ஜோதி மகாலிங்கத்தின் அருள் கிடைத்து விட்டதே என்று வினவ. வந்த அந்த மனிதர் எனது பெயர் கொண்டையா நான் திருவிடைமருதுரை சேர்ந்தவன் எனது குடும்பத்தொழில் கோயில்களில் ஸ்தல புராணங்களை வண்ண படமாக வரைவது. அதன் நிமித்தமாக நான் இந்த ஊருக்கு ஒரு மாரியம்மன் கோயிலில் வேலைக்கு வந்து இருக்கிறேன் அப்படியே தங்களையும் தரிசனம் செய்ய இங்கு வந்தேன்  ஐயா என்று பதில் கூறினாராம்.
 
மிக மிக மகிழ்ச்சியுடன் ஸ்ரீரமணர் கொண்டையாவுக்கு ஆசி வழங்கி நீ இனி நன்றாக பிரகாசிக்க போகிறாய் உன்னால் இனி எதிர் காலத்தில் மக்கள் அனைவரும் வீடுகளில் வித விதமான தெய்வங்களை காகிதத்தில் வைத்து வணங்க போகிறார்கள் என சொல்லி அனுப்பினாராம்.
 
கொண்டையா ஒரு முறை கோயில்பட்டியில் ஒரு கோயிலில் பணி செய்து கொண்டிருக்கையில் ஒரு பெரிய தொழில் அதிபர் கொண்டையாவினை அணுகி ஐயா நீங்கள் என்னுடன் வர முடியுமா நான் ஒரு அச்சு தொழில் ஆரம்பிக்க போகிறேன் நீங்கள் படம் வரைந்து தாருங்கள் நான் அச்சிட்டு காலேண்டராக விற்பனை செய்கிறேன் என்று. கேட்க சம்மதம் சொல்லிய கொண்டையா அவருடன் சிவகாசிக்கு சென்று படங்களை வரைந்து தர அது தினசரி காலேண்டராக வெளிவந்து மிக மிக வேகமாக பிரபலம் அடைந்ததாம். அச்சு தொழிலும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்ததாம்.
 
கொண்டையா தனது ஊரான திருவிடைமருதூர் வந்து தனது சீடர்கள்   அனைவரையும் தன்னுடன் வருமாறு சொல்லி சிவகாசி வரும் வழியில் திருவானைகோயிலில் அப்போது முகாமிட்டுருந்த காஞ்சி பெரியவரிடம் தனக்கு ஏற்பட்ட இந்த மாற்றத்தை விவரித்து இது சிறப்பாக விளங்க ஆசி கோரினாராம்
 
பதிலுக்கு காஞ்சி பெரியவர் முதலில் சில்பி என்று ஒருவர் படங்களை வரைந்து
கொண்டிருக்கிறார் நீ அவரிடம் போய் சில நாட்கள் தங்கு அவர் உனக்கு சில சாத்திரங்களை சொல்லி தருவார். பின்னர் மேலும் பல தெய்வங்களை நீ வரையலாம் என்று ஆசி கூறினாராம்
 
கொண்டையா உடனே நேராக சில்பியினை அணுகி காஞ்சி பெரியவர் கூறியத்தை சொன்னாராம். மிக்க மகிழ்சியுடன் கொண்டையாவிற்கு பல்வேறு நுணுக்கங்களை சொல்லி கொடுத்து ஆசி கூறி அனுப்பினாராம் அவர் கீழ்கண்ட  சில நுட்பங்களை சொல்லி கொடுத்ததாக திரு கொண்டையாவின் மகன் வானொலியில் சொன்னார்.
 
சரஸ்வதி வெள்ளை புடைவையுடன் தண்ணீரில் மிதக்கும் தாமரை மீதுதான் மடியில் வீணை வைத்து கொண்டு இருக்க வேண்டும். ராமர் நீல நிறத்தில் தான் வரையப்படவேண்டும்
கிருஷ்ணர் இளம் கறு நிறத்தில்தான் வரையப்பட வேண்டும். இவ்வாறு பலப்பல விஷயங்கள். 
 
மேற்படி இந்த கொண்டையா தனது கடைசி காலத்தில் தனது மூதாதையர்கள்  வாழ்ந்த திருவிடைமருதூர் திருப்பணிபேட்டைக்கு வந்துதான் காலமானார். அவரது குடும்பத்தினர் தற்போது நமது ஊருக்கு அருகில் உள்ள திருலோகியில் வாழ்ந்து வருவதாக் வானொலியில் செய்தி. 
 
இதுதான் நான் வானொலியில் சிவகாசி செய்தி மூலமாக பெற்ற திருவிடைமருதூர் செய்தி.
 
திக்கெட்டும் பரவட்டும் திருவிடைமருதூர் புகழ்.
 
ஸ்ரீதர்  
09941892821

An emotional Re-union with our New RS Sir! (Part-II)

“For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.”

Who on earth can forget these immortal lines of Wordsworth littered with emotionally strong words reflecting the beauty of nature, unkempt by humanity, and a reconciliation of man with his environment?!
And , can Time the villain of Youth obliterate even from the faint memory of a somnolescent student (yours truly) of TAHS the mellifluence of the golden voice of New RS Sir when he used to rhapsodize and riffle  these lines vibrating with rhythmic resonance  and metrical melody?

Alexander Humphrey Woollcott’s famous lines “I have no need of your God-damned sympathy.  I only wish to be entertained by some of your grosser reminiscences” are not an understatement,   for it feels so good to tread back along memory threads embracing episodes and incidents and go to days bygone and take in the good contained in them.   For a few moments, at least for a few  moments,  that gives such a fine escapade from the unhappy realities of present.

Yesternight, before I decided to pay my maiden visit to the house of New RS Sir, I don’t know how or why, all of a sudden I found myself thinking of all those bygone days of school-life.Mentally  I  slipped from the hurray and bustle of the city to the deadly quietude of the village– Those days, It was such fun!!! I feel ecstatic even now by just thinking about them.   Boys of our class, some of the incorrigible sort, used to do all sorts of naught and non-sense. Even in the class it was no less with our little strength of 20 odd boys and girls, and the teacher. I remember the frequent times when  we were caught running through the long straight corridors, laughing and shouting, and had to serve a hands-up and knee-down punishment in sunlight for half-an-hour.
Ah…this reminds me of something too.  A stitch on my head and a poke on my knees stand witness to till this day as an indelible mark of those vibrant, vociferous and walloping escapades during the short break in between each class before the next teacher takes over.  This will abruptly come to naught when New RS Sir appears on the scene.  Even the HM used to peek from the corner of his eyes along the corridors and see with utter disbelief the complete metamorphosis the very boisterous scene had  undergone in a momentary flash.  The commanding voice of New RS Sir from the corner room of thenorthernwing of the school used to lancinate  through the din and dust of the long corridor unto the playground at the far end!  Perhaps his colleagues also enjoyed listening to him, not inclined to arrest the flow of his language by their own interjections in their class rooms.  More evident when you can hear clearly even the ruffle of a leaf wafting down the winds in its rescissory rectitude.

The proceleusmatic recital of the Daffodils combined with theexoteric expatiation would rather make Wordsworth shy of pedanticpedagoguishness.

My good grace! While writing about Wordsworth and pedagogues I remember his punning with words when a slight tinge of exasperation showed up in the contours of his face upon persistent prevarication by some of us. Shot the laconic retort“persistent perversity provokes the patient pedagogue to produce particularly painful punishment."(being ablunderbuss boy myself I used to jot down letter by letter every word that he wrote on the blackboard ). Shame to our Tamil politicians boasting of rhyme and rhythm!
I love those student days. Who does not?  So far, if I’m asked to decide, I’d call them the best days of my life for it was absolute carefree-ness that marked those years. The worst nightmare and the greatest worry was the exams and the most pressing issue was a good score in the English paper and a pat in the back from New RS Sir was equivalent to obtaining a college degree!

Here is a little device he adduced for remembering the parts of speech:

A noun is the name of anything,
As school, or garden, hoop, or swing.
                         Adjectives tell the kind of noun;
As great, small, pretty, white or brown.
                         Conjunctions join the words together;
As, bread and butter; wind or weather.
                         Verbs tell of something to be done;
As sing, or play or skip, or run.
                         A preposition stands before
                         A noun; as in or through a door
                         How things are done the adverbs tell;
As, slowly, quickly, ill or well.
                         An exclamation shows surprise;
                         As, ah! how pretty! oh! how wise!
                         Three little words you often see
                         Are articles; a or an and the.
                         Instead of nouns the pronoun stands;
Your book, his work, her hat, my hand.
                         The whole are called nine parts of speech;
                         Which reading, writing, speaking, teach.

This little bit of poetry saved us from many definitions, and it has helped many pupils who have understood it.
Countless are the manifold ways he used to teach us good English speaking and writing skills.

Alas….the solace never stays afoot for time’s tread is just one-sided. And at the end of the day, it’s just those pleasant and so-nostalgic memories of the bygone days that I’m left with to cherish.

The cracking sound of a coffee tumbler brought me back from the crescendo of interstitial betides that never tire of intromitting down the glottis of gusty and gorgeous memory lane!  The sweet and smiling voice of the Gruhni of the house, Srimathy New RS, brought me back from the utopian citadel of total self-indulgent enchantment where I sat alone for couple of minutes contemplating.

“Thanks Mami, why this formality? “A low murmur managed to muster just enough strength to gurgle few sounds out of my gutturals.   As a matter of fact, the hot coffee helped me to get away from the shackles of lackadaisical moorings. 

“Help yourself Kalivaradhan, be free and friendly.  After all we are well ahead of the teacher-student relationship.  We both have seen couple of generations after us and we are mature enough to understand and appreciate the transiency and transiliency of this transmigratory life !”



Well, I could perceive now the metamorphosis of the teacher of English into an Acharya of metaphysical philology!  How metaphorical it would be to describe the transformation in the words of Longfellow's Psalm of Life:

                         "Tell me not in mournful numbers,
                         Life is but an empty dream;
                         For the soul is dead that slumbers
                         And things are not what they seem."

We all  experience emotions quite omnifarious, from joy to deep love to anger to frustration to disenchantment to defeasance to self-defacement.  We become slaves of situations!   We always React rather than ACT ProActively! Vedanta appears to teach us modify our modus operandi by synergizing our mental  energies towards the in-dweller, the SELF !

New RS Sir, the New RS Acharya , is beckoning you  to come again next week to listen to a different track record, his experiences towards an ultimate goal to Self-Realization!
 
To be continued in Part-III
K Kalivaradhan

Makkal Arangam - Great Beginning




An Emagazine by TDR ites
--------------------------------------------

திரு விசு சார் அவர்களுக்கு,

திருவிடைமருதூர் மக்கள் அரங்கம் தொடக்க நிகழ்ச்சியை கண்டு களித்தோம். ( திருவாதிரை அல்லவா?). எங்கள் மண்ணுக்கு இத்துனை மகத்துவம் அளித்த ஜெயா டி.வி. யையும், தங்கள் மக்கள் அரங்கம் குழுவையும், தங்களையும் வாழ்நாள் முழுவதும் எங்களால் மறக்கவே முடியாது. பழம்பெருமை வாய்ந்த ஒரு சின்ன ஊர் இன்று பொலிவிழந்து உறங்கிக்கிடக்கிறது என்ற ஆதங்கத்தில் 
உதித்ததுதான் TOSA.

நாங்கள் பத்து, இருபது ஆண்டுகள் கடுமையாக உழைத்தாலும் கிடைப்பதற்கரிய ஒரு முகவரியை தங்கள் மக்கள் அரங்கம்,  ஒளி பரப்பிய தொடக்க நிகழ்ச்சியிலேயே, எங்கள் ஊருக்கும். எங்கள் பள்ளிக்கும், எங்கள் அமைப்புக்கும் பெற்றுத்தந்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. 

தமிழ் நாட்டில் மட்டுமின்றி உலகளவில் திருவிடைமருதுருக்கு ஒரு அடையாளம் கிடைத்துவிட்டது என்பதை  உணர்வு  பூர்வமாக இன்று புரிந்து கோண்டோம். சாதாரண மக்களை அசாதாரண திறமைசாலிகளாக மாற்றும் ரசாவாதியாக இன்று விசு அவர்களைப் பார்க்கிறோம்.

ஜெயா டி.வி.க்கு நன்றி!
விசு சாருக்கு நன்றி!!
மக்கள் அரங்கம் குழுவைச்சார்ந்த அத்தனை கலைஞாகளுக்கும் நன்றி!!!

மூர்த்தி 
--------------------------------------------------------------------------------

Hari OM !

Namaste Visu Sir!

On watching the First episode of Tiruvidaimarudur Makkal Arangam programme telecast yesterday on Jaya TV - 

Words fail to infuse life
To thoughts sharp as knife ;
Words are short and frail
clamant heart could barely sail !

When a sleepy little town
scoff the umbers down ;
wakes up on January Eight
Seldom knows the hidden delight !

Strikes the clock O'eleven
Squander all to Joy Haven !
Yonder gigles the Idiot Box
Saulters turn wilder knocks!

Comes the empty chair First
Bumps the whoops bare next!
Claps abound when Visu Thrust
Raps around shoulder Crust!

Tiruvidai marudur brought on stage
Yells the crowd on spots vantage!
Nothing do I know of more
All my sighs grossed avoure!

Visu Sir ! You are kind beyond belief
Gave TDRites soothing relief!
Globe around TDR Dreams
Swell avow when Jaya beams!

The septette swaraas of Madhu and Ramesh
Wizardy Gkay SolaiBharati and Kumar !
And Iolite Ilahi all Notes far too amaze
Where can you get melodymaze far too afar?

Thanks to Visu Sir and all at TOSA
You gave us all a rapacious Ambrosia!
Mele mitakkutu Manasellam Lesaa
Ellaam UN Arul Mahaalingesaa!

DhanyavadaH
kalivaradhan

Tamil version of the above poem

"சிந்தனைக் குவியலின் சீற்றத்துக்கு
வார்த்தைநயம் வடிகால் கட்டுமோ?
எகிறிப்பாயும் உணர்ச்சி வெள்ளத்துக்கு
எதிர்நீச்சல் போடுமோ வார்த்தைஜாலம்?

வெள்ளென விழித்தெழுந்த காலம்போச்சு
விடியாகனவா வெலவெலக்கும் ஊருக்கு !
அஷ்டமத்துசனீ விலகியது ஜனவரி 8 
அடிச்சயோகம் தெரியல்ல அட போங்கப்பா !!

வெய்யில பாத்தா மணி பதிணொன்னு
வீதியெல்லாம் கும்பல் சாரிசாரி நின்னு !
ஜொல்லுவிட்டு பாக்குது தொலைகாட்சியத்தான்
பல்லுபோன கிழவங்கூட முண்டியடிக்கறான்யா !!

வந்ததய்யா நாக்காலி மணியோசை போல
சத்தமெல்லாம் எகிறுதே ஆகாசம் பொளக்க !
வந்தாரய்யா வாத்தியாரு எங்கள் ிசு சாரு
விசிலடிச்சாங் கும்பலெல்லாம் தம்பட்டை போட !!

ஆங் ! மேடையெல்லாம் பேனரு திருவிடைமருதூரு
ஆடையவிழ குதிக்குதைய்யா அம்புட்டுபேரு !
பாடையில போகுமுன்னே பாத்துட்டான்யா கிழவனு
சோடைபோகல்லே சொலிக்குதைய்யா எங்கவூரு !!

ஈரமுள்ள தீரனய்யா எங்கள் விசு ார் !
மனபாரமெல்லா போச்சு மார்கழி பனிபோல !
பார்முழுக்க பார்க்க வைச்சார் டைமருதூர்
கார்முகில் வண்ணன்போல் ஜயா காட்சியில !!

ஏழுஸ்வரங்களாம் மதுரமேஷ் ஸோலைபாரதீ
வாழுங்கலை வித்தகராம் ஜீகேயும் குமாரும் !
நாளுஞ்சொலிக்குமாம் நவமணி இலாஹியும்
வேறு எங்கு கிடைக்குமாம் விசு ாருக்கு ?

சொல்லுவேன் நன்றி விசுசார் தோசா
வெல்லுதே ஊணும் உயிரும் இன்பத்தேனா !
மேலே மிதக்குது மனமெல்லாம் லேசா
என்னே உன் அருள் மகாலிங்கேசா !!"

---------------------------------------------------

Respected Visu Sir,
  • I / we saw the inaugural episode of Tiruvidaimarudur Makkal Arangam, today.
  • It's really great. Directorial touch, abilities, smartness, perfection, precision,reading the pulse of the viewers could be easily seen in your behind the screen hard and smart work. Appreciation from the bottom of our heart.
  • On seeing our place, hearing the name of our place, hearing the name of TOSA, making the viewers of 140 countries familiar, to reach our place through your 100 % clarity voice, our joy knew no bounds. 
  • On seeing the " Nandri " ----Tiruvidaimarudur Old Student's Association (TOSA), slide  on the concluding part of the programme ,...it brought tears in my eyes. A small outfit from a mid-sized village, got recognition through a popular TV Channel's popular programme.
  • I received lot of calls from my members and on behalf of TOSA and everybody, A BIG thanks to  Jaya TV, You and your TEAM.
We pray to LORD Mahalinga for every success to you and yourTEAM, in the days to come also.

------------------------------------------------------------------------------------------------------

அன்புக்கும், பண்புக்கும் ,மரியாதைக்கும் உரிய மக்களரங்க நாயகன்  உயர்திரு  விசு  ஸார்
அவர்களுக்கு,
எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் . இன்று நடந்த திருவிடைமருதூர்
மக்களரங்க நிகழ்ச்சியின் முதல் எபிஸோடு பார்த்து எனக்கு வந்த போன் கால்கள் ஏராளம்.
TOSA  வை பாராட்டி தாங்கள் சொன்னவைகளைக்கேட்டு எங்களது கண்கள் கலங்கின.
தாங்கள் நடித்த ,direct செய்த படங்களை பலமுறை பார்த்தவன் என்ற முறையிலும் ,அரட்டை அரங்கம் ,மக்களரங்க நிகழ்ச்சிகளை பலமுறை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.தற்போது எங்களது
TOSA வை ஜெயா TV  மூலம் global க்கு கொண்டு சென்றதற்கு நன்றி .
ம.மகாலிங்கம் S/O LATE K.MAHADEVAYYAR,RETIRED H.M. OF TIRUVAVADUTHURAI TAHS SCHOOL
6,காமகோடி தெரு,
பாலாஜி நகர்,
கொரட்டூர் R.S.
சென்னை-600076
9941670209
-----------------------------------------------------------------------------------------------------
Respected Sir,

கிரிக்கெட்டில் இந்திய ஆட்டக்காரர் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தால் ஏற்படும் மகிழ்ச்சி 
கிடைக்குமே அதே உணர்வு இன்றும் எனக்கு கிடைத்தது.

செலெக்ஷன் கமிட்டி முதல் நாள் வந்தபோது அவர்களின் எதிரில் சிலர் பேசியதை கேட்டபோது 
கவலையுடன் பயமும் தொற்றிக்கொண்டது.திருமண தேதியை குறித்துவிட்டு 
தவிக்கும் பெற்றோரின் பயம் என்னுள்ளும் ஏற்பட்டது உண்மைதான் .

இன்று முதல் எபிசோடை பார்த்தவுடன் பேரகுழந்தை பிறந்த மகிழ்ச்சியை அடைந்தேன் 

நால்வர் பாடியதலம் இன்று உமாமஹேஸ்வரனாம் விஸ்வநாதரால்  மேலும்
சிறப்பு பெற்றது.

மக்கள் அரங்கம் குடும்பத்தை சார்ந்த ஒவ்வொருவருக்கும் எங்களின் நன்றி .

வரும் வாரமும் ஆரவாரமே என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
flower bouquet

அன்புடன்
ராம்ஜி
Secretary -TOSA
9790778943